தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை.. நீரில் முழ்கிய நெல்லை ஆட்சியர் அலுவலகம்.. போக்குவரத்து பாதிப்பு!
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது.
சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, ஆங்காங்கே தேங்கி நின்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

வெள்ளம் போல் மாறிய சாலைகள்
மதுரையில் நேற்று இரவு விடியவிடிய பெய்த கனமழையால் சிம்மக்கல், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இரவு 7 மணியளவில் தொடங்கிய மழை, அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது. தீபாவளி பண்டிகையையொட்டி மாலை நேரங்களில் கடைவீதிகளுக்கு ஆடைகள் வாங்க சென்ற பலரும் மழையில் சிக்கி தவித்தனர்.

மழைநீரில் முழ்கிய ஆட்சியர் அலுவலகம்
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் மாலை முதல் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. சாலைகளில் அதிகளவு மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பாதிப்பை சந்தித்தனர்.

முக்கிய சாலைகளில் தேங்கிய தண்ணீர்
இதுமட்டுமல்லாமல் விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்துவாங்கியது. அதேபோல் திண்டுக்கல், தேனி, நாகை, ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

இன்றும் மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications