சென்னையில் அதிகாலையில் பெய்த சாரல் மழை... சட்டென்று மாறிய வானிலை
தமிழகத்தில் பல ஊர்களில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நகர்பகுதிகளிலும் புறநகரிலும் மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
சென்னை: சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து குளுமை பரவியுள்ளது. அக்னி நட்சத்திரத்தால் அனல் காற்று வீசிய நிலையில் சட்டென்று மாறிய வானிலையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது.

அக்னி நட்சத்திர காலமாக இருப்பதால் சென்னையில் வெயில் கொளுத்தியது. பல இடங்களில் அனல் காற்று வீசியது. இரவு நேரங்களில் மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு முதல் சென்னை மாநகரின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதிகாலையில் சென்னை நகர் பகுதிகள் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. வியாசர்பாடி, சைதாப்பேட்டை, ஆவடி, சேத்துப்பட்டு,அனகாபுத்தூர், மேடவாக்கம், ஈக்காட்டுதாங்கல், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.
சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து குளுமை பரவியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது போல், வேலூர், சேலம்,திருச்சி, விழுப்புரம், திருவாரூர் உட்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதே போல காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கத்திரி வெயில் தொடங்கிய சில நாட்களில் மழை பெய்யத் தொடங்கியதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சற்று அவதிப்பட்டாலும் கூட கோடை வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications