உடலை தைத்த மழைநீர் வடிகால் கம்பி.. பறிபோன பத்திரிகையாளர் உயிர்.. இதான் 95% பணியா? எடப்பாடி கண்டனம்
சென்னை: மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசு முடிவடையாத திட்டங்களில் இனி ஒரு உயிர்பலி கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பருவமழை காலத்தில் சென்னையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு செய்யப்படாததால் பள்ளங்கள் காணப்படுகின்றன.
அதேபோல் சென்னை ஜாஃபர் கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் பணி முடித்து அந்த வழியாக வீடு திரும்பியுள்ளார்.

பத்திரிகையாளர் மரணம்
அப்போது ஆபத்தான முறையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் அவர் விழுந்தார். அந்த பள்ளத்தில் நீட்டிக்கொண்டு இருந்த கட்டுமான கம்பிகள் முத்துகிருஷ்ணனின் உடலை துளைத்தன. படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையே பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்ததில் தனியார் தொலைக்காட்சி பணியாளர் திரு.முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையை தருகிறது.

அரசுக்கு கண்டனம்
பருவமழை துவங்க இருக்கும் சூழ்நிலையில் இன்னும் முன்னேற்பாட்டு பணிகள் கூட முழுமையாக முடியாத அவல நிலையில் 95% பணிகள் முடிவடைந்து விட்டதாக பொய் பரப்புரை செய்து வருவதும், மக்களின் உயிருக்கு மதிப்பளிக்காமல் அலட்சியத்தோடு இந்த விடியா அரசும், மாநகராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

நிவாரணம்
மக்களை ஏமாற்றும் விளம்பர அரசியலை விடுத்து உயிரைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, முடிவடையாத இத்திட்டங்களால் இனி ஒரு உயிர் பலி கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த செய்தியாளரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ருபாய் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்?












Click it and Unblock the Notifications