எடப்பாடி கண்ணுல பயம்.. ஆதாரம் இதுதான் பாருங்க மக்களே.. புட்டுபுட்டு வைத்த புகழேந்தி
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் நடத்திய கூட்டத்தால் மிரண்டு போன எடப்பாடி பழனிசாமி அச்சத்தால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். அதிமுக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இபிஎஸ் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் நீதிமன்ற அவமதிப்பாகவே பார்க்க முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் அணிகளாக பிரிந்துள்ளன. கட்சியை உரிமை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தரப்பில் நியமிக்கப்பட்ட கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்தார்.

இபிஎஸ் நோட்டீஸ்
இந்த நிலையில் அதிமுக கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவது ஏன்?

சட்ட நடவடிக்கை
கட்சியின் பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓபிஎஸ் இதுபோன்று செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் அளிக்க வேண்டும். இந்த நோட்டீஸிற்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால், உறுதியாக சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மிரண்டு போன எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமையகம் மூலம் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், இது நகைப்புக்குரிய விஷயமாகவே பார்த்திருக்கிறோம். இப்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, இத்தனை நாட்களாக இது தெரியவில்லையா. நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தை பார்த்து மிரண்டு போய்விட்டார்கள். ஓபிஎஸ் கூட்டம் போட்ட பின்னர், பதிலுக்கு நாங்களும் நடத்துகிறோம் என்று பதறி கூட்டம் கூட்டுகிறார்கள்.

எதற்காக நோட்டீஸ்?
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு முதலமைச்சரானவர் ஓ.பன்னீர் செல்வம். அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது. பின்னர், யார் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது புரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கு வரும் ஜனவரி 4ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், எதற்காக நோட்டீஸ் வழங்க வேண்டும்.

பதிலளிக்க அவசியமில்லை
இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக தான் பார்க்க முடிகிறது. அதிமுக தொண்டர்களின் கட்சி. எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள நோட்டீஸ், எதையும் கட்டுப்படுத்த போவதில்லை. புறம்போக்குகள் கொடுக்கும் நோட்டீஸ்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக பதிலளித்தார்.
-
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications