துரோகி யார்.. ரகசிய ஆலோசனையின்போது சீறிய எடப்பாடி..! ஷாக் ஆன மாஜிக்கள்! அடுத்த ஆபரேஷன் இதான்!
சென்னை : துரோகி என தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனையின்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 2 விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் கடந்த வாரம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது முதல் அரசியல் அரங்கில் அவை தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தனது ஆதரவாளர்களுடன் இந்த விசாரணை அறிக்கைகள் தொடர்பாக ஆலோசித்துள்ளார்.
அப்போது, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, சசிகலா, ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அமைந்துள்ளது பற்றியும், அடுத்தகட்ட திட்டங்கள் பற்றியும் ஈபிஎஸ் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

2ல் 1
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இரண்டும் கடந்த வாரம் வெளியாகி அதிமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. முதல் அறிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், இரண்டாவது அறிக்கை சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராகவும் அமைந்துள்ளத்ய். இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையை வைத்து எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருப்பதாக ஈபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆறுமுகசாமி அறிக்கை
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் அளிக்கவும், ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவும் சசிகலா தடையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முடிவுகளை சசிகலா குடும்பத்தினரே எடுத்தனர் என்றும், அப்பல்லோ மருத்துவமனை முழுவதும், சுகாதாரத்துறையும் சசிகலா கன்ட்ரோலில் இருந்தது என்றும், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தீவிர ஆலோசனை
இந்த 2 ஆணைய அறிக்கைகளும் வந்த பின்னர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 2 அறிக்கைகள் சொல்லும் முக்கியமான தகவல்கள் பற்றி சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசித்துள்ளார் ஈபிஎஸ். சமீபத்தில், தனக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்களுடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார் ஈபிஎஸ். இந்த ஆலோசனையின்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விவரங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

யார் துரோகி?
அப்போது எடப்பாடி பழனிசாமி, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றி ஆவேசமாகப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. நான் சசிகலாவுக்கு துரோகம் செய்ததாக அவர்கள் விமர்சிக்கிறார்கள். இப்போது சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகங்கள் இந்த அறிக்கையில் வந்திருக்கின்றன. அம்மா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என்று மட்டும் தான் இந்த அறிக்கை சொல்லவில்லை. மற்றபடி, சசிகலாவுக்கு எதிராக அவ்வளவு சந்தேகங்களை முன்வைத்துள்ளனர் என ஈபிஎஸ் பேசியுள்ளாராம்.

சசிகலா + ஓபிஎஸ்
மேலும், இதை நாம் நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சசிகலா மட்டுமல்லாது இந்த அறிக்கை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிலைப்படுத்தி பேச வேண்டும். துரோகி யார் என இந்த அறிக்கையை வைத்து மக்களிடமே கேட்கவேண்டும், பொதுக்கூட்டங்களில் அவர்களுக்கு பதிலடியாக இதைப் பற்றி பேச வேண்டும் என ஆதரவாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மாஜிக்கள் ஷாக் - அசரலையே
ஒருபக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட கொஞ்சமும் அசராமல், எதிர் தரப்பை காலி செய்ய எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கியுள்ளதை அறிந்து, அவருக்கு நெருக்கமான சீனியர் மாஜிக்களே அசந்து போயிருக்கிறார்கள். அண்ணன் கொஞ்சமும் அசரல.. திமுகவால் அவரை ஒண்ணும் செய்ய முடியாது என அவர்கள் தங்கள் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

விரைவில் பொதுக்கூட்டத்தில்
எடப்பாடி பழனிசாமி விரைவில் பொதுக்கூட்டத்தை நடத்தி, ஆறுமுகசாமி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சசிகலா, ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தன்னை துரோகி என விமர்சிக்கும் சசிகலா, ஓபிஎஸ் தரப்பினருக்கு பதிலடி கொடுத்து, அவர்களின் விமர்சனங்களை நொறுக்கலாம் என ஈபிஎஸ் கணக்குப் போட்டிருக்கிறாராம்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன?











Click it and Unblock the Notifications