2 பேரால் வந்த குழப்பம்.. ஒருவருக்கு தலைமை கழக பதவி.. இன்னொருவருக்கு ரிவீட்.. தூக்கி அடித்த எடப்பாடி!
சென்னை : பொன்னையனுடன் பேசியதாக சர்ச்சைக்குரிய ஆடியோவில் இடம்பெற்ற அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்னையன், அதிமுக பிரமுகர் ஒருவருடன் பேசியதாக வெளியான ஆடியோ அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆடியோவில் பேசியதாக கூறப்பட்ட பொன்னையனுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பதவி அளித்த ஈபிஎஸ், நாஞ்சில் கோலப்பனை கட்சியை விட்டே தூக்கி அடித்துள்ளார்.

வெளியான ஆடியோ
கன்னியாகுமரி மாவட்டத்தைச் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பன் என்பவரிடம், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் போனில் பேசியதாக சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி தொடங்கி முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்பான பல்வேறு ரகசியங்களையும், கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் வெளிப்படுத்துவதாக அந்த ஆடியோவில் இருந்தது. ஆனால், அதில் பேசியது தான் இல்லை என்றும், மிமிக்ரி செய்யப்பட்டது என்றும் பொன்னையன் மறுப்பு தெரிவித்தார்.

ஈபிஎஸ் தரப்பில் குழப்பம்
அதேசமயம், போனில் மறுமுனையில் பேசியதாக கூறப்படும் அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பன், போனில் பேசியது தானும், முன்னாள் அமைச்சர் பொன்னையனும் தான் எனத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தார் நாஞ்சில் கோலப்பன். இந்த ஆடியோவால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். கே.பி.முனுசாமி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் பொன்னையன் மீது கடும் கோபத்திற்கே சென்றனர். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகமடைந்தனர்.

பொன்னையனுக்கு பதவி
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளை புதிதாக நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக துணை பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமிக்கப்பட்டார். பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியாகி தனது தரப்புக்குள் புயல் வீசிய நிலையிலும் பொன்னையனுக்கு தலைமைக் கழக பதவி வழங்கப்பட்டது.

தூக்கி அடிக்கப்பட்ட கோலப்பன்
அதே நேரம், பொன்னையனுடன் மறுமுனையில் பேசிய நாஞ்சில் கோலப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேரை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ள நிலையில், தற்போது மேலும் 21 பேரையும் கட்சியை விட்டே நீக்கியுள்ளார் ஈபிஎஸ்.

21 பேர்
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் தான் பொன்னையனுடன் பேசிய ஆடியோ சர்ச்சையில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட அதிமுக பிரமுகர் நாஞ்சில் கோலப்பனும் இடம்பிடித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
-
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
‘என்ன ஓபிஎஸ் எவ்வளவு செலவு செய்வீங்க’.. நேர்காணலுக்கு தயாரான ஸ்டாலின்.. பரபரக்கும் போடிநாயக்கனூர்











Click it and Unblock the Notifications