Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசிய அரசு பள்ளி மாணவி! ஆட்டோ டிரைவர் மகளுக்கு எத்திராஜ் கல்லூரி உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் படித்து 578 மதிப்பெண்களை பெற்ற மாணவி பூங்கோதைக்கு எத்திராஜ் கல்லூரியில் அவர் விரும்பும் படிப்பை முழு உதவித்தொகையுடன் வழங்க முன்வந்துள்ளதாக கல்லூரியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதை எத்திராஜ் கல்லூரியின் தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார். அந்த மாணவியிடமும் அவர் பேசியுள்ளார்.

Ethiraj College offers an education with full Scholarship for GCC Poongodhai

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 7.60 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 2,478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 397 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி உள்ளது.

இந்த நிலையில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாநகராட்சி பள்ளியில் பயின்றவர் பூங்கோதை. இவர் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 578/600 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். அத்துடன் நுனி நாக்கில் ஆங்கிலத்தை சரளமாக பேசுகிறார். இவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுநர்.

இவர்கள் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். பொருளாதார ரீதியாக படிப்பதற்கு கஷ்டப்பட்ட நிலையில் சிறிய வீட்டில் படிக்கவும் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இவருடைய மூத்த சகோதரி பி.பார்ம் படித்து வருகிறார். பூங்கோதைக்கு பி.காம் படித்துவிட்டு சிஏ படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதாம்.

மேலும் அவர் வசிக்கும் கொடுங்கையூர் பகுதியில் உள்ள குழந்தைகள் உயர் கல்வி படிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பூங்கோதையின் தந்தை பார்த்தீபன் தனது ஆட்டோவை அடகு வைத்து பொருளாதார ரீதியில் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பூங்கோதையின் தாய் வீட்டு வேலைகளை செய்து கணவருக்கு பொருளாதாரத்தில் உதவி வருகிறார். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கூறுகையில் எங்கள் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை சரளமாக பேசுவார்கள். அது போல் இங்கிருந்து படித்துவிட்டு செல்லும் மாணவர்கள் கல்லூரி தேர்வில் arrear வைத்ததே இல்லை என பெருமிதத்துடன் கூறுகிறார்.

மாநகராட்சி பள்ளிகளிலேயே முதல் இடம் பிடித்து சாதனை படைத்த பூங்கோதை கூறுகையில் நான் மாநகராட்சி பள்ளிகளிலேயே முதல் மாணவியாக தேர்வு ஆனதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அப்படியே வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. என் பெற்றோர் கடைக்கு சென்றாலே விலை பட்டியலை பார்த்து பொருட்களை வாங்கலாமா வேண்டாமா என்ற இயலா நிலையை நான் மாற்றும் அளவுக்கு பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும்.

வாழ்வில் அது போன்ற உயரத்தை அடைய வேண்டும். என் தந்தை ஆட்டோ டிரைவராக இருந்தாலும் நான் படிப்பதற்கு தேவையான அனைத்து சூழல்களையும் அமைத்து கொடுத்தார். எனது வெற்றிக்கு பெற்றோர், என் சகோதரி, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவரும் ஊக்கம் அளித்தார்கள். இவ்வாறு அந்த மாணவி ஆங்கிலத்தில் எங்குமே திக்கி திணறாமல் பேசுகிறார்.

அதிலும் அவர் பேசும் ஸ்டைல் இருக்கே அப்பப்பா! கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது. மாநகராட்சி பள்ளிகளிலேயே பூங்கோதை முதலிடத்தை பிடித்த நிலையில் பொருளாதார ரீதியில் அவருடைய இயலாமை உள்ளிட்டவை குறித்த அவருடைய பேட்டி வைரலானது.

இதையடுத்து மாணவி பூங்கோதைக்கு எத்திராஜ் கல்லூரியில் இலவசமாக சீட் தர கல்லூரி நிர்வாகம் முன் வந்துள்ளது. இது குறித்து எத்திராஜ் பெண்கள் கல்லூரியின் தலைவர் முரளிதரன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மாணவியின் பேட்டியை பகிர்ந்தமைக்கு நன்றி. பூங்கோதையிடம் தற்போது பேசியிருக்கிறேன்.

அவர் பி.காம் படிக்க விரும்புகிறார். அந்த படிப்பை உதவித்தொகையுடன் வழங்குவதாக அவரிடம் தெரிவித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மாணவிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+