மீண்டும் இணையும் ’இரட்டை இலை’? உச்சகட்ட ஷாக்கில் எடப்பாடி! பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஜெயிப்பாரா?
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் இனிமேல் அடுத்ததாக பொதுக்குழு நடத்த வாய்ப்பு உள்ளதா அவ்வாறு நடந்தால் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு வெற்றி கிடைக்குமா என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று தெரிவித்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக உத்தரவிட்டிருக்கிறார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் நியமனம், புதிய பதவிகள் என அனைத்துமே செல்லாததாகி விட்டது.

அதிமுக பொதுக்குழு
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இணைந்து பொதுக்குழுவை மீண்டும் கூட்ட வேண்டும் எனவும் பொதுக்குழுவை கூட்ட ஆணையாளரை நியமிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆதரவாக தீர்ப்பு
தற்போதைய நிலவரப்படி அதிமுகவில் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில் இனி அவருக்கு ஏறு முகம் தான் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

மேலும் பலம்
அதிகாரத்தின் உச்சியில் எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோதே பல்வேறு ஒன்றிய செயலாளர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஓபிஎஸ்ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது ஓ பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் அதிகாரம் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் நிலையில் இது அவருக்கு மேலும் பலம் அளிக்கும் என்கின்றனர்.

தற்போது இல்லை
தற்போது பொதுக்குழு கூட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது எனவும் தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருக்கிறார். அவ்வாறு குறிப்பிட்ட அளவு ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு கிடைத்த பிறகு பொதுக்குழு கூட்டமும் குறித்த முடிவுகளை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு இருப்பதால் பொதுக்குழு கூட்டும் முடிவை ஓ பன்னீர்செல்வம் ஒத்தி வைப்பார் என்றே கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications