போலி டிஆர்பி ரேட்டிங் ஊழல்- நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்
சென்னை: அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியின் போலி டிஆர்பி ரேட்டிங் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
போலியாக டி.ஆர்.பி.ரேட்டிங்கை காட்டி விளம்பர வருவாய் பெற்றதாக 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ரிபப்ளிக் டிவி உள்ளிட்டவை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமியும் விசாரணையில் சிக்கியுள்ளார். இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது: போலி டிஆர்பி ரேட்டிங் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உரிய விசாரணை நடத்த வேண்டும் அதன் தலைவர் சசிதரூருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிஎஸ்கே டீம் விளையாடுறது எப்படி இருக்குன்னா.. வெளுத்து கட்டும் வீரேந்திர சேவாக்!