கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்! யார் இந்த இனயத்துல்லா? அப்படி என்ன செய்துவிட்டார் இவர்?
முதல்வரிடம் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் பெற்ற இனயத்துல்லாவின் பின்னணி
சென்னை: குடியரசுத் தினத்தையொட்டி கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தை கோவையை சேர்ந்த இனயத்துல்லா என்பவருக்கு வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தை பெறக் கூடிய வகையில் இனயத்துல்லா அப்படி என்ன செய்து விட்டார், அவரது பின்னணி என்பது பற்றி பார்க்கலாம்.
இது தொடர்பாக அரசு விடுத்துள்ள குறிபின் விவரம் வருமாறு;

கோட்டை அமீர்
மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' என்ற பதக்கத்தினை தோற்றுவித்து, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு பதக்கமும், ரூ.25,000/-ற்கான கேட்புக் காசோலையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

மத நல்லிணக்கத்திற்காக
இவ்வாண்டு (2023) 'கோட்டைஅமீர் மத நல்லிணக்கப் பதக்கம்'கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.எம்.ஏ.இனயத்துல்லா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. திரு. எம்.ஏ. இனயத்துல்லா த/பெ. திரு. எம்.வி. அப்துல் சுபான் ராவுத்தர் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டம் தெற்கு உக்கடம், கோட்டைமேடு, S.S.கோவில் தெரு, கதவு 24எண்.40 என்ற முகவரியில் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் பகுதியில் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.

எம்.ஏ. இனயத்துல்லா
எம்.ஏ. இனயத்துல்லா என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து சமய மக்களிடமும் நட்புடன் பழகி வருவதுடன் கோயம்புத்தூர் பகுதியில் ஏற்பட்ட பல்வேறு பதட்டமான சூழ்நிலைகளின்போது காவல் துறையுடன் இணைந்து பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கம் பராமரிக்கப்பட பணியாற்றியுள்ளார். கோவை மாவட்டசுன்னத் ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மத வேறுபாடின்றி கல்வி நிதி உதவி வழங்கி வந்துள்ளதுடன் மனிதநேயம், மத ஒற்றுமை மற்றும் கல்வி மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கோயம்புத்தூர் கோட்டைமேடு
கோயம்புத்தூர் கோட்டைமேடு பகுதியில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம் இளைஞர்களால் நடத்தப்படும் மத நல்லிணக்க விழாக்களில் கலந்து கொண்டு, இந்து, கிறித்துவ மத குருக்களோடு இணைந்து மத நல்லிணக்கத்தை உருவாக்க பணியாற்றி வருகிறார். மேலும், கடந்த 23.10.2022 அன்று கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கடந்த 03.11.2022 அன்று திரு.எம்.ஏ.இனயத்துல்லா அனைத்து சுன்னத் ஜமாத் அமைப்பு நிர்வாகிகளுடன் கோட்டைஈஸ்வரன் கோவிலுக்கு சென்று கோவில் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களை சந்தித்து, அச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன் கோயம்புத்தூர் நகரில் இந்து மற்றும் முஸ்லீம் சமூகத்தினரிடையே சகோதரத்துவம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதற்கு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தனர்.

மத நல்லிணக்கப் பதக்கம்
கோயம்புத்தூர் பகுதியில் மதநல்லிணக்கம் மற்றும் இந்து முஸ்லீம் சமூகத்தினரிடையே ஒற்றுமை மற்றும் அமைதி நிலவவும் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவ்வாறு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு வரும் திரு.எம்.ஏ.இனயத்துல்லா அவர்களைப் பாராட்டும் வகையில், இவருக்கு 2023-ஆம் ஆண்டிற்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' வழங்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications