என்னிடம் மிரட்டி வாங்கிய பையனூர் பங்களாவை.. மீட்டுதாருங்கள்.. ஸ்டாலினுக்கு கங்கை அமரன் கோரிக்கை?
சென்னை : என்னிடம் மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை, சசிகலாவிடம் இருந்து எனக்கே மீட்டுக் கொடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கங்கை அமரன் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார். விரைவில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்போவதாக கூறியிருக்கிறார்.
2017-ம் ஆண்டு சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தினர்.
அப்போது நடத்திய ஆவணங்கள் அடிப்படையில் சென்னை போயஸ் கார்டனிலுள்ள 10 கிரவுண்ட் நிலம் உள்ளிட்ட ரூ. 300 கோடி ரூபாய் சொத்துகளைக் கண்டறிந்து பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கினர்.

பையனூர் பங்களா
செங்கல்பட்டு மாவட்டம் பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பையனூர் பங்களா 100 கோடி மதிப்புடையது இந்த பங்களா சசிகலாவிற்கு தொடர்புடையது. இந்நிலையில் பையனூர் பங்களா வாசலில் பினாமி சட்டத்தின் கீழ் சொத்து முடக்கப்பட்டிருப்பதாக மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இதுவரை சசிகலா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்புடையதாக கருதப்படும் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பினாமிதடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எப்போது வாங்கியது
இதனிடையே இந்த சொத்துக்கள் தொடர்பான விசாரணை நடத்தப்படும். விசாரணை முடிவின் அடிப்படையில், முடக்கப்பட்ட சொத்துகள் தவறுகள் இல்லை என்றால் உரிமையாளரிடம் திருப்பித் தரப்படும் அல்லது அரசு ஏலம் விடும் எனவே என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னரே தெரியும். தற்போதைய நிலையில் பங்களாவைப் பயன்படுத்தலாம். ஆனால், விற்கவோ, அடகுவைக்கவோ முடியாது. . 1994-ல் வாங்கப்பட்ட இடம் அது.

எப்போது வாங்கினார்கள்
இதனிடையே பையனூர் பங்களா, தன்னுடைய சொத்து என்றும்,. அதை , தன்னிடமிருந்து சசிகலா தரப்பு மிரட்டி வாங்கியதாக பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் பலமுறை கூறியிருக்கிறார். இப்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஏக்கர் நிலமுடைய பையனூர் பங்களா சொத்தினை 1994ல் சசிகலா குடும்பத்தினர் வெறும் 24 லட்சத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

ஸ்டாலினை சந்திக்க முடிவு
இந்நிலையில் தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட அந்த பங்களாவை தனக்கே மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். கங்கைஅமரன் இதுதொடர்பாக அவரை முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சசிகலா மிரட்டினார்?
49 ஏக்கரில் அமைந்துள்ள பையனூர் பங்களாவை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கங்கை அமரன் முயற்சியில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். தன் மனைவி பெயரில் ஆசை ஆசையாக அந்த சொத்தை சசிகலா தரப்பு வற்புறுத்தியும் மிரட்டியும் கேட்டதால் 1994ல் எழுதி கொடுத்ததாக கங்கை அமரன் குற்றம்சாட்டி உள்ளார். வெறும் 24 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அந்த இடத்தின் மதிப்பு தற்போது 100 கோடி என்று சொல்கிறார்கள். ஆனால் சரியான உண்மை விலை தெரியவில்லை. இதனிடையே அந்த பங்களாவை எப்படியாவது மீட்க வேண்டும் என்று தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவும் தயாராகி வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications