நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி.. ரூ.2,000 கோடி வரப்போகுது
மதுரை: மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிதி நிறுவனங்கள் நியோமேக்ஸ், ஹெல்பின், எம்.ஆர்.டி.டி. ஆகியவை மோசடியில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன.இந்த நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக பல கோடி சொத்துக்கள் உள்ளன. இந்தநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக 60,000 பேர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் முதற்கட்டமாக ரூ.2,000 கோடி சொத்துகள் பொதுஏலம் நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிதி நிறுவனங்கள் நியோமேக்ஸ், ஹெல்பின், எம்.ஆர்.டி.டி. ஆகியவை மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதில் நியோமேக்ஸ் நிறுவனம் கடந்த 10வருடம் முன்பு தொடங்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் பணத்திற்கு மாத வட்டி வழங்கி,குறிப்பிட்ட ஆண்டில் முதிர்வு தொகை வட்டியுடன் அசல் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. இதனை நம்பி பலரும் முதலீடு செய்தனர்.

தேனி மாவட்டத்தில் மட்டுமே 500 கோடி வரை முதலீடு செய்திருந்தார்கள்.இன்னும் குறிப்பாக சொல்வது என்றால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் என்ற கிராமத்தினர் மட்டுமே 200 கோடி நியோமேக்ஸில் முதலீடு செய்திருந்தார்கள். இவர்களுக்கு அசல் மற்றும் வட்டி என எதுவுமே வரவில்லை. தேனி மாவட்டத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுக்க பல ஆயிரம் கோடி மோசடி நடந்திருந்தது.
அதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கண்ட நிறுவனங்களின் பல கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி உள்ளனர். இந்நிலையில் இந்த நிதி நிறுவனங்களின் இயக்குனர்கள் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சொத்துகளை மேற்கண்ட நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், பதிவுத்துறையை சேர்ந்த அதிகாரி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த குழு நியோ மேக்ஸ்க்கு சொந்தமான சொத்துகளை கையகப்படுத்தியது.
நிலங்கள், ஓட்டல், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் என 4 வகையாக வகைப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 60 ஆயிரம் புகார்தாரர்கள் உள்ளனர். தற்போது ரூ.6,000 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் முதலில் கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பொதுஏலம் நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
-
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications