பசுமைப் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் - 4 மாநில முதல்வர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிஷா மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிலில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசுகளை வெடிக்க பல மாநில அரசுகள் தடை விதித்து வருகின்றன.

Green crackers should be allowed - MK Stalins letter to 4 state Chief Minister

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தேக்கமடைந்தன. இந்த ஆண்டும் கொரோனா காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளின் விற்பனை செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மூன்றாம் அலை எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி அரசு 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதே போல ராஜஸ்தான் மாநிலத்தின் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மாநிலத்தில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருள்களை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசா, ஹரியானாவிலும் பட்டாசுகளை விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.

பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகாசியில் 5 லட்சம் குடும்பங்கள் பட்டாசு தொழிலை நம்பி இருப்பதாகவும் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பேரியம் உப்பை ஏன் பட்டாசு தொழிற்சாலைகளின் கிடங்கில் வைத்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர். பின்னர், பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,தீபாவளி கொண்டாட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் இல்லை என தெரிவித்தனர். தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிஷா ஆகிய 4 நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+