பல ஏரியாக்களில் விடாமல் பெய்கிறது.. சென்னையை துவைத்து எடுக்கும் கனமழை.. கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில்.. தமிழகம் முழுக்க பல இடங்களில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.
அதிலும் சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

சென்னை
சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குரோம்பேட்டை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தண்ணீர் தேங்கியது
சென்னையில் பெய்யும் கனமழை காரணமாக சாலையில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.முக்கியமாக அண்ணா சாலை, வடபழனி, தாம்பரம் பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் சாலைகளில் பயணிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நிலை என்ன
சாலையில் மோசமாக தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலும் அதிகம் ஆகியுள்ளது. மக்கள் பலர் அலுவலகம் விட்டு வீட்டிற்கு செல்லும் நேரத்தில் மழை பெய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எப்படி
இன்று இரவும் சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பெரும்பாலான எரிகள் நிரம்பி உள்ள நிலையில், தற்போதும் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications