அதிகாலையிலிருந்து செம மழை.. டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சி.. சென்னைக்கும் மழை இருக்கு!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.

டெல்டா மாவட்டம்
அதன்படி தற்போது டெல்டா மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தஞ்சை ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் புதுக்கோட்டையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருகிறது .

தேனி எப்படி
தேனி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேலும் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. மதுரையில் லேசாக சாரல் மழை பெய்து வருகிறது.

நீலகிரி ஊட்டி
நீலகிரி மற்றும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி, கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. கடலூரில் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை.

சென்னை எப்படி
இந்த மழை காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை இன்று மாலை மழை பெய்யும். இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications