தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு இடியுடன் கனமழை பெய்யும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி, தூத்துக்குடியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி,காரைக்காலில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணித்துள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

நாளைய தினம் செப்டம்பர் 2ஆம் தேதியன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
நேற்றைய தினம் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 13 செமீ மழையும் திண்டுக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோர பகுதிகளில் தனுஷ்கோடி முதல் குளச்சல் வரை 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயரக்கூடும் என்றும் வானிலை மைய அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications