இந்து மதம் காங்கிரஸுக்கு சொந்தம்! ஆர்எஸ்எஸ் & பாஜக உள்ளே புகுந்துட்டாங்க! கே.எஸ்.அழகிரியின் அட்டாக்!
சென்னை : இந்து மதம் காங்கிரஸுக்கு சொந்தமான மதம். ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வினர் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு புகுந்தவர்கள். அவர்கள் இந்தியாவின் பூர்வகுடி மக்கள் அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், வேலை இல்லத் திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்டவற்றைக் கண்டித்தும்
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன பேரணியில் ஈ.வி.கே.எஸ் இலங்கோவன், கே.வி.தங்கபாலு, சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர், மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், அகில இந்திய உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
500 க்கும் மேற்பட்ட காங்கிரசார் இந்த பேரணியில் பங்கேற்ற நிலையில் நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.அழகிரி," பாசிசத்தின் உச்ச கட்டத்தில் மோடி அரசு உள்ளது.நேற்று மீண்டும் நம் அலுவலகத்தில் சோதனை செய்தார்கள். மோடிக்கு பெரிய எமன் ஜி.எஸ்.டி. தான். நான் என்ன செய்தாலும் நாட்டில் பிரதிபலிப்பு வராது என மோடி நம்புகிறார். அதிகாரத்தில் இருந்து வீழ்ந்தால் முகவரியே தெரியாது போவார்கள். 5G அலைக்கற்றை ஏலம் நடந்துள்ளது. குறைந்த மதிப்பில்தான் ஏல தொகையை நிர்ணயித்தார்கள். ஆனால் அதை விட குறைந்த விலைக்கு தான் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின் சிறந்த கூட்டணியை அமைத்துள்ளர். அதனால் தான் பாஜகவால் தமிழ்நாட்டை ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஜனநாயகக நாட்டில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதனால் தான் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கைகளை வைத்தார். இதற்க்கு அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கொந்தளித்தனர். தற்பொழுது நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் முன்பை விட சிறந்த முறையில் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு. மோடிக்கு அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசாங்கம் செய்தது.

பாஜக
நம் இறையாண்மை, கடவுள் நம்பிக்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது
சோனியாகாந்தி, ராகுல் காந்தி மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எத்தகைய எதிர்வினை வரும் என நோட்டம்விடுகிறார்கள். நாடு முழுவதும் சிறந்த எதிர்வினையை நாம் காட்டி வருகிரோம். சுதந்திரத்திற்கு பிறகு தற்போதுதான் காங்கிரஸ் கட்சி போராட ஆரம்பித்துள்ளது ஆங்கிலேயர்களை துரத்தியது போல, கொள்ளையர்களையும் துரத்துவோம்

இந்து மதம்
மதத்தில் சீர்திருத்தம் வேண்டும் என சொல்கிறோமே தவிர மதம் வேண்டாம் என சொல்லவில்லை. இது எங்களுக்கு சொந்தமான மதம். நீங்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்து புகுந்தவர்கள். நீங்கள் பூர்வீக குடிகள் அல்ல. ராணுவத்தில் இருக்கும் கட்டுப்பாடை, கட்சிக்குள் கொண்டுவந்தால் ராணுவத்தை விட காங்கிரஸ் கட்சி வலிமையானதாகிவிடும். கட்சிக்குத் தேவை சர்வாதிகாரம் அல்ல ; கட்டுப்பாடு ; அனைவரும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும்" எனப் பேசினார்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications