Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடவுள் இருக்கிறார்.. எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவருக்குதெரியும்.. எஸ்.வி. சேகர் பளிச் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் யாரை பார்த்தும் பொறாமைப்பட்டதில்லை. எனக்கு என்ன தேவையோ அதை இறைவன் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

Recommended Video

    தலைமையை மட்டும் மாற்றினால் போதாது | Mr. S. Ve. Shekher interview part-01 | Oneindia Tamil

    நடிகரும், முன்னாள் எம்எல்ஏவும், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவருமான எஸ்.வி.சேகர் கொடுத்த பேட்டியின் தொடர்ச்சியை இப்போது காணலாம்:

     எல் முருகன்

    எல் முருகன்

    கே: மத்திய அமைச்சராகியுள்ள எல் முருகனால் தமிழகத்திற்கு என்ன பயன்?

    ப: அவர் என்ன செய்வார் என தெரியவில்லை. மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா என கேட்கிறீர்கள். மோடி அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து எந்த மீனவரும் சுடப்படவில்லை. இது ஏன் நடக்கிறது என்றால் இந்திய கடல் எல்லையில் மீன்கள் குறைவு, மீனவர்கள் அதிகம்.

    இலங்கை கடற்பரப்பில் மீன்வர்கள் குறைவு, மீன்கள் அதிகம். இரட்டை வலை, மடி வலையை பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு சட்டம் இருக்கிறது. சர்வதேச எல்லையை தாண்டியது அது சட்டவிரோதம். இந்த எல்லையை தெரிந்து கொள்ள மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மோடி அரசில் இதுவரை மீனவர்கள் சுடப்பட்டார்கள், இறந்தார்கள் என ஒரு சம்பவமும் நடந்ததில்லை.

    எனவே இதையெல்லாம் எல் முருகன் பார்த்துக் கொள்வார். என்னை மதித்து எனக்கு அங்கீகாரம் கொடுத்தால் நான் ஐடியா கொடுப்பேன்.

     70 வயதிலும்

    70 வயதிலும்

    கே : 70 வயதிலும் எனர்ஜிட்டிக்காக இருக்கிறீர்கள், அதற்கு என்ன காரணம்?

    ப: நான் யாரை பார்த்தும் பொறாமைப்பட்டதில்லை. எனக்கு என்ன தேவையோ அதை இறைவன் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இரு வகைகளாக வாழலாம். ஒன்று நாம் சம்பாதிக்கும் பணத்திற்குள் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

    இல்லாவிட்டால் நாம் வாழ நினைக்கும் அளவிற்கு சம்பாதித்யத்தை நேர்மையாக அதிகரிக்க வேண்டும். நாடகம் நடிப்பதில் வரும் பணத்தை வைத்துக் கொண்டு என்னுடன் நடிக்கும் நாடக நடிகர்களுக்கு உதவி வருகிறேன். எனது டிராமா குழுவே ஒரு அறக்கட்டளைதான்.

     தலைவர்கள் குறித்து ஒரு வரி விளக்கம்

    தலைவர்கள் குறித்து ஒரு வரி விளக்கம்

    கே: தலைவர்கள் குறித்து ஒரு வரியில் விளக்கம்

    ப: முன்னாள் முதல்வர் கருணாநிதி - அன்பானவர்
    ஜெயலலிதா- ஆளுமையானவர்
    பிரதமர் மோடி - தைரியமானவர்
    கமல்ஹாசன்- கமல் என்றாலே குழப்பம், சரியான திசையை நோக்கி பயணிக்க முயற்சிப்பர்
    ரஜினிகாந்த்- சிக்கல் இல்லாமல் வாழ தெரிந்தவர், சிக்கல் இல்லாமல் தப்பிக்க தெரிந்தவர்
    சீமான்- அரசியல் ஆமை
    அன்புமணி ராமதாஸ்- அட்வான்ஸ் பட்ஜெட்
    எடப்பாடி பழனிச்சாமி- நிரந்தர முதல்வர் இடத்திற்கு போராடிக் கொண்டிருப்பவர்
    சசிகலா- சைக்கிள் கேப்பில் கார் ஓட்ட முயற்சிப்பர்
    வானதி ஸ்ரீனிவாசன்- தமிழக பாஜக எம்எல்ஏ
    எச் ராஜா- எம்எல்ஏ பதவியை தவறிவிட்டவர்
    ஓபிஎஸ்- மிக நல்ல நண்பர்
    சோ- எனது மானசீக குரு
    பாலசந்தர்- எனது திரைப்பட குரு

     நற்காரியங்கள்

    நற்காரியங்கள்

    எஸ் வி சேகர் செய்யும் உதவிகள்: ஆண்டுக்கு சுமார் 100 மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். ஆண்டுக்கு 200 பேருக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறார். ரத்த தானம் செய்து வருகிறார். ஆதரவற்ற சடலங்களை அரசு மருத்துவமனைகளில் இருந்து கொண்டு வந்து அடக்கம் செய்யும் பணிகளை அறக்கட்டளை மூலம் நிகழ்த்துகிறார். இவரது அறக்கட்டளைக்கு யாரேனும் உதவ முன்வந்தால் [email protected] என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+