Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாக்டர் ஆகனும் தான் ஆசைப்பட்டேன்..ஆனால் அது நடக்கவில்லை.. நினைவுகளை பகிர்ந்த டிஜிபி சைலேந்திர பாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக 4 ஆண்டுகள் முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் அது நிறைவேறாமல் போய் விட்டது என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு பேசினார்.

தமிழ டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை உயர் அதிகாரி என்பதையும் தாண்டி, இளைஞர்கள் நலன் மற்றும் அவர்களின் எதிர்கால வழிகாட்டுதல்களில் மிகுந்த அக்கறை காட்டுபவராக அறியப்படுபவர்.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை ஊட்டும் உரைகள் மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கி வரும் சைலேந்திரபாபு உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருபவர்.

கருத்தரங்கு, பயிற்சி முகாம்

கருத்தரங்கு, பயிற்சி முகாம்

தனது சமூக வலைத்தளங்களில் வேலைப்பளுவுக்கு மத்தியில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு உள்ளிட்டவற்றையும் அவ்வப்போதும், தற்போதும் பகிர்ந்து வருகிறார். பல இளைஞர்களின் ரோல் மாடலாகவும் திகழும் டிஜிபி சைலேந்திர பாபு தான் படிக்கும் போது டாக்டர் ஆக ஆசைப்பட்டதாக கூறியிருக்கிறார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு

இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டார். கருத்தரங்கை தொடங்கி வைத்த பிறகு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை சார்பில் காவல்துறையினருக்கு முதுகுவலி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டு இருக்கும்ம் புதிய பிரிவையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-

டாக்டர் ஆக ஆசைப்பட்டேன்

டாக்டர் ஆக ஆசைப்பட்டேன்

மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பொதுமக்கள் நலமுடன் வாழ முடியும். உண்மையான சேவை மனப்பான்மையை கொண்ட மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ளனர். எனக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக 4 ஆண்டுகள் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் மருத்துவர் ஆக வேண்டும் என்று நினப்பது ஆரோக்கியமான விஷயம் ஆகும்.

முதுகு வலி சிகிச்சை

முதுகு வலி சிகிச்சை

காவல்துறை வேலையில் உடல் உழைப்பு பொதுவாகவே அதிகம் உண்டு. இதனால், காவல்துறையினருக்கு முதுகு வலி, உடல் வலி ஏற்படும். சென்னையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் பணியில் இருக்கின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் ,மூன்றாவது திங்கள் கிழமைகளில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள முதுகு வலி சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாகும். இந்த வசதியை அனைத்து காவலர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது

சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வச்திகளுடன் 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. நேர்மையான அரசு ஊழியர்களுக்கான புகலிடம் அரசு மருத்துவமனை. அண்மையில் மூத்த போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+