கிருஷ்ணரை பற்றி வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் தப்புதான்.. ஸ்டாலின் அதிரடி பேட்டி
Recommended Video

சென்னை: கிருஷ்ண பகவான் குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உள்நோக்கத்தோடு பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தோடு, கடவுள் கிருஷ்ணரை ஒப்பிட்டு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வந்தது.
இதனால் இந்து அமைப்பினர் கடும் கோபமடைந்துள்ளனர். திராவிடர் கழகம், திமுகவுக்கு ஆதரவு அளிக்க கூடிய இயக்கம் என்பதால், திமுகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

தாக்குதல்
இந்த நிலையில், திருச்சியில் நேற்று முன்தினம் இரவு வீரமணி பங்கேற்ற திராவிடர் கழக கூட்டத்தில், இந்து முன்னணியில் கல், செருப்பு வீசி தாக்குதலை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணர் குறித்த பேச்சுக்காகத்தான் இந்த தாக்குதல் என கூறப்பட்டது.

சிறப்பு பேட்டி
இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறப்பு பேட்டியளித்தார். அதில் இதுபற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஸ்டாலின் கூறியிருப்பதாவது. வீரமணி கிருஷ்ணரை பற்றி உண்மையாகவே, சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு. ஆனால் அவர் உள்நோக்கத்தோடு எதையும் பேசவில்லை.

திரித்துவிட்டனர்
உதாரணம் காட்டி பேசினார் வீரமணி. ஆனால் தேர்தல் களத்தில் ஆர்எஸ்எஸ் போன்ற இந்து அமைப்பினர் திரித்து மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், தனது மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றும், காலை, இரவு என கடவுள் வழிபாடு செய்யக்கூடியவர் என்றும், அதில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நான் பின்பற்றும் கொள்கை.

பராசக்தி கொள்கை
கோயில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.. அது கொள்ளையர்களின் கூடாரமாகிவிட கூடாது என்பதே பராசக்தி படத்தில் கருணாநிதி எழுதிய வசனம். அதுதான் நாங்கள் பின்பற்றும் கொள்கை. யாருடைய நம்பிக்கையையும் விமர்சனம் செய்வது நோக்கம் இல்லை, என்றார்.

மக்கள் கோபம்
மேலும், தமிழகத்தில் இதுவரை 30 லோக்சபா தொகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்துள்ளேன். மக்களின் மனநிலையை என்னால் உணர முடிகிறது. மத்தியில் மோடிக்கு எதிராகவும், மாநிலத்தில் எடப்பாடி அரசுக்கு எதிராகவும், மக்கள் கோபத்தில் உள்ளனர். இவ்விரு அரசுகளுக்கும், முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்கள் நோக்கமாக உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications