Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிடில் கிளாஸ் மக்களுக்கு ‘செம’ நியூஸ்: வீட்டுமனை வாங்க கூட்டுறவு வங்கிகளில் கடன்! அமைச்சர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை : வீட்டு மனை வாங்க கடன் வழங்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் அறிமுகப்படுத்தப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மிடில் கிளாஸ் மக்களுக்கு சொந்த வீடு என்பது பெரும் கனவு. வாடகை வீடுகளில் வசிப்பதில் இருக்கும் அசௌகரியங்கள், வீட்டு வாடகை உயர்வு போன்ற பிரச்சனைகளால் நடுத்தர வர்க்க மக்கள் சொந்த வீடு என்பதையே வாழ்நாள் கனவாகக் கொண்டிருக்கிறார்கள். சொந்த வீடு கட்டவேண்டும் என்பதற்காக பலரும் தனியார் வங்கிகளில் அதிக வட்டிக்கு கடன் பெற்று பல ஆண்டுகளுக்கு வட்டி கட்டுவதைப் பார்த்திருப்போம்.

Important announcement for middle class families in tamilnadu

அந்த நிலையை மாற்றும் வகையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் முக்கியமான அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாவத்தின்போது வெளியிட்டுள்ளார். கூட்டுறவு வங்கிகள் வழியே, அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை வாங்க புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், மற்ற வங்கிகளை விட குறைந்த வட்டி விகிதத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டார்.
கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் 2023-24 செயல்படுத்தப்படும்.
நாட்டுபுறக் கலைஞர்கள், பாரம்பரிய இசைக்கருவி மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலம் சிறப்புக் கடனுதவி வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் மூத்த குடிமக்களுக்கு மறு அடமானக் கடன் வழங்கப்படும்.

ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கக் கடன் வழங்கப்படும்.

Important announcement for middle class families in tamilnadu

கடன் பெறும் உறுப்பினரின் வயது உச்சவரம்பு 60 லிருந்து 70 ஆக உயர்த்தப்படும். மத்திய கூட்டுறவு வங்கி உதவிப் பொதுமேலாளர்களுக்கு பொதுப்பணி நிலைத்திறன் நடைமுறைப்படுத்தப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலாளர் பணியிடத்திற்கான நுழைவுப் பணியிடங்களையும் பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டுவரப்படும்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு ஐந்து புதிய கிளைகள் துவங்கப்படும். கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,500 நியாயவிலைக் கடைகள் பொலிவூட்டப்படும்.
5 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ் பெறப்படும். திருவள்ளூர் மாவட்டம் திரூரில் ஒரு கூட்டுறவு அருங்காட்சியகம் அமைக்கப்படும். 2 ஆயிரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றப்படும்.
சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 புதிய வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் அமைக்கப்படும். உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் அமைச்சர் பெரியகருப்பன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+