உதயசூரியன் சின்னம் + டீ சர்ட் அணிய எதிர்ப்பு.. உதயநிதிக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி - ஷர்ட் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் துணை முதல்வராக மகன் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, சிறப்பு திட்ட அமலாக்கம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.

திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பெரும்பாலானவர்கள் வெள்ளை சட்டை, கருப்பு சிவப்பு கரை பொறித்த வேஷ்டி அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கருப்பு பேண்ட், வெள்ளை நிற டீசர்ட்டில் உதயசூரியன் சின்னத்தை வைத்தபடி வலம் வருகிறார்.
வயநாடு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டி? பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வியூகம்! பரபர தகவல்
கட்சி நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சிகளிலும் உதயசூரியன் சின்னம் பொறித்த வெள்ளை நிற டீசர்ட் அணிந்தே உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதாவது சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்திய குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
வாரம் 5 நாள் மட்டுமே பணி.. வங்கி ஊழியர்களுக்கு டிசம்பரில் ஹேப்பி நியூஸ்! பணி நேரம் எப்படி இருக்கும்?
அந்த மனுவில், அனைத்து அரசு ஊழியர்களும் முறையான ஆடை அணிந்து வர வலியுறுத்தும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். ஃபார்மல் பேண்ட் ஷர்ட் அல்லது தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ள போதிலும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
உட்கார்ந்ததால் வழக்கு.. ஜெயலலிதா விளம்பர செலவை கேட்ட ஆர்டிஐ ஆர்வலர் 10 ஆண்டுக்கு பின் விடுதலை
மேலும் அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்த தடை உள்ளதாக கூறியுள்ள மனுதாரர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயல் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதால் அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிந்து வரும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications