ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் ஓங்கிய இ.பி.எஸ். கை.. எதிர்பாராத திருப்பங்களால் பரபரக்கும் அதிமுக..!
சென்னை: அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதால் ஓ.பி.எஸ்.தரப்பு கலக்கம் அடைந்துள்ளது.
ஓ.பி.எஸ். அணியில் இருந்த பலரும் இப்போது அவரை விட்டு விலகிச்செல்வதற்கு காரணம், தன்னை நம்பி வந்தவர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பதே ஆகும்.
ஆனால் அதே வேளையில் கிளைக்கழக நிர்வாகிகள் தொடங்கி மாநில அளவிலான நிர்வாகிகள் வரை அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை தட்டாமல் செய்துகொடுத்து தனக்கான இமேஜை உயர்த்திக்கொண்டார் முதல்வர் இ.பி.எஸ்.

ஆட்டம் கண்ட ஆட்சி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓ.பி.எஸ். நடத்திய தர்மயுத்தம் காரணமாக அதிமுக ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. இன்று எந்த ஆட்சியில் துணை முதலமைச்சராக இருக்கிறாரோ அதே ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்து ஜெயலலிதா உருவாக்கிய அரசை வீட்டுக்கு அனுப்ப அரும்பாடு பாட்டார் ஓ.பி.எஸ். இருப்பினும் சசிகலாவின் தேர்வான இ.பி.எஸ்., நெருக்கடியான காலகட்டத்தை சமயோஜிதமாக சமாளித்து மூன்று மாதங்கள் கூட தாக்குபிடிக்கமாட்டார் என எண்ணியவர்கள் மத்தியில் நான்காண்டு காலத்தை நிறைவு செய்துவிட்டார்.

ஆதரவாளர்கள் விலகல்
ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கியபோது அவருக்கு முதல் ஆதரவு கொடுத்த எம்.பி. லட்சுமணன் இப்போது திமுகவுக்கு சென்றுவிட்டார். அதேபோல் அவரது பக்கம் நின்ற நத்தம் விஸ்வநாதன், செம்மலை, கே.பி.முனுசாமி போன்றோர் கூட இப்போது இ.பி.எஸ். பக்கம் தங்கள் ஜாகையை மாற்றத் தொடங்கிவிட்டனர். இதற்கு காரணம் கட்சி ரீதியாகவும் சரி, ஆட்சி ரீதியாகவும் சரி தன்னை நம்பி வந்தவர்களுக்கு இதுவரை ஓ.பி.எஸ். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை என்பதே.

நிர்வாகிகள் கோரிக்கை
ஆனால் அதேவேளையில் கட்சியினர் தன்னிடம் முன்வைக்கும் கோரிக்கைகளை தட்டாமல் செய்துகொடுத்து தனக்கான ஆதரவாளர்கள் வட்டத்தை படிப்படியாக விரிவாக்கிக் கொண்டார் இ.பி.எஸ். தற்போதும் அவருக்கு டி.டி.வி.தினகரன் மீது தான் வருத்தம் உள்ளதே தவிர சசிகலா மீது பெரியளவில் வருத்தம் இருப்பதாக தெரியவில்லை. கடந்த நான்காண்டுகளில் சசிகலாவை பற்றி அவர் எந்த இடத்திலும் சிறு விமர்சனம் கூட செய்ததில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அதிமுகவில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் கூட இ.பி.எஸ். பக்கம் நிற்கத்தொடங்கி விட்டார்கள் போல் தெரிகிறது.

பரபரக்கும் அதிமுக
இதனிடையே நாளை நடைபெறும் அதிமுக செயற்குழுவில் கட்சி-ஆட்சி என இரண்டு விவகாரங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கும் எனத் தெரிகிறது. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 250 பேருக்கு செயற்குழு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் இ.பி.எஸ். ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications