உலக வங்கியில் ரூ 4 லட்சம் கோடி கடன்.. கையில் 1.76 லட்சம் கோடி ரொக்கம்.. ஷாக் சுயேச்சை!
Recommended Video

சென்னை: சுயேச்சை வேட்பாளர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கு குறித்த அபிடவிட் தகவல்கள் அதிர வைப்பதாக உள்ளன. அதை விட பெரிய அதிர்ச்சி என்னவென்றால் இதை தேர்தல் அதிகாரிகள் ஏற்று அனுமதித்துள்ளனர். அதை விட மிகப் பெரிய அதிர்ச்சி என்னன்னா இவர் தாக்கல் செய்த அபிடவிட்டை உயர்நீதிமன்ற நோட்டரி பப்ளிக் ஒப்புதல் கொடுத்து சான்றிதழ் அளித்துள்ளதுதான்.
அப்படி என்ன செய்து விட்டார் என் கட்சிக்காரர் என்று மக்கள் கேட்பது காதில் விழுகிறது. இந்த சுயேச்சை வேட்பாளர் இதை தெரிந்துதான் செய்தாரா இல்லை தெரியாமல் செய்தாரா என்பது இன்னொரு வேடிக்கையான கேள்வியாகும்.
உண்மைதான், மறைந்த நெல்லை ஜெபமணியின் மகன்தான் ஜே. மோகன்ராஜ். இவர்தான் இந்த செய்தியின் கலாட்டா நாயகன்.. அதாவது கதாநாயகன்.

மோகன்ராஜ்
ஜெபமணி ஜனதா.. இதுதான் கட்சியின் பெயர். இதன் தலைவராக இருந்தவர்தான் மறைந்த ஆர்.ஜெபமணி. எல்லோருக்கும் நெல்லை ஜெபமணி என்றால் நன்றாக தெரியும். இவரது மகன் பெயர்தான் ஜே மோகன்ராஜ் என்பதாகும். இவர் கிழக்கு அபிராமபுரம், மயிலாப்பூரில் வசித்து வருகிறார். 67 வயதாகிறது.

சுயேட்சை
பெரம்பூர் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார் சுயேச்சை வேட்பாளரான ஜே. மோகன்ராஜ். இதுவரை எல்லாம் சரிதான். ஆனால் இனிமேதான் மேட்டரே ஆரம்பிக்கிறது.

கலாட்டா
ஜே. மோகன்ராஜ் தேர்தல் அதிகாரியிடம் ஒரு அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். அதைப் பார்த்தால் அப்படியே நெஞ்சே அடைத்து விடும் போல இருக்கிறது. அப்படி ஒரு கலாட்டாவை செய்து வைத்துள்ளார் இந்த மோகன்ராஜ்.

ஆனந்தி நகை
அதில் ரொக்கக் கையிருப்பு என்ற பகுதியில் பார்த்தபோது இவரிடம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி ஆனந்தியிடம் வெறும் ரூ. 20,000 பணம்தான் உள்ளதாம் (ரொம்பப் பரிதாபம்தான்). இதுதவிர ஆனந்தியிடம் 13 பவுன் நகைகள் வேறு உள்ளதாம்.

நகைக் கடன்
ஆச்சா, அடுத்து நகை மேட்டருக்கு வருவோம். மைலாப்பூர் தென்னிந்திய வங்கி மற்றும் திருவள்ளூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் ரூ. 3 லட்சத்திற்கு நகைக் கடன் பாக்கி இருக்கிறதாம்.

வருமான வரி
அடுத்த மேட்டர்தான் உலக மகா ஷாக். அதாவது நம்ம மோகன்ராஜ் உலக வங்கியிடம் ரூ. 4 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளாராம். இதுதான் அதிர வைத்துள்ளது. இவர் கடைசியாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தது 2002-03ல்தானாம். அதன் பிறகு வருமான வரித்துறை பக்கமே எட்டிக் கூட பார்க்கவில்லை போல.

தேர்தல் ஆணையம்
இந்த அபிடவிட் இப்போது வைரலாகி வருகிறது. இந்த அபிடவிட்டை அத்தாட்சி கொடுத்து சான்றிதழ் அளித்த புண்ணியவான் பெயர் வழக்கறிஞர் வி. அறிவழகன் என்பதாகும். இந்த அபிடவிட்டை தேர்தல் ஆணையமும் ஏற்று அதன் இணையதளத்திலும் போட்டு வைத்துள்ளது.

புரியலையே..
மோகன்ராஜ் வேண்டும் என்றேதான் இந்த அபிடவிட்டைக் கொடுத்திருப்பது உறுதியாகிறது. ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் புரியவில்லை. நமது நாட்டில் அதிகாரிகள் எந்த அளவுக்கு ஓட்டையாக இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறாரா அல்லது நமது நாட்டின் ஊழல் உள்ளிட்ட நிலையை மக்களுக்கு சுட்டிக் காட்ட விரும்பினாரா என்பதும் புரியவில்லை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications