தென்மேற்கு வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெற்கு வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Rain Alert! இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும்! Indian Meteorological Dept | Oneindia Tamil

    தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த மாதம் இறுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற்றி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    Indian Meteorological Department alerts depression in Bay

    இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+