மீண்டும் விரிசல் விழுமா அதிமுகவில்.. ஓங்கும் ஓபிஎஸ் கை.. பெரும் அதிர்ச்சியில் எடப்பாடியார் தரப்பு!
அதிமுகவுக்குள் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே விரிசல் அதிகமாகும் என தெரிகிறது.
Recommended Video
சென்னை: ஏற்கனவே உடைஞ்சது இல்லாமல், அதிமுக மேலும் ரெண்டாக உடைஞ்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அப்படி இருக்கு இப்போ நிலைமை!
ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பனிப்போர் தொடர்ந்து வந்தது. தேர்தலில் சீட் வழங்கும் விவகாரத்திலும் இவர்களுக்குள் இணக்கம் இல்லாமல் போனது.
ஒருகட்டத்தில், மகனை வாரணாசிக்கு அழைத்து சென்று, கட்சியில் முன்பு போல தனக்கு மரியாதை இல்லை என்று ஓபிஎஸ் புலம்பியதாகவும் சொல்லப்பட்டது. அப்போதே மகனுக்கு மத்திய அமைச்சர் சீட் கன்பார்ம் பண்ணிவிட்டார் ஓபிஎஸ் என்று தகவல்கள் கசிந்தன.

சீனியர் வைத்திலிங்கம்
எனினும் கட்சிக்குள் ஏராளமான சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. இப்போதான் ஜெயித்து வந்திருக்கிறார் ரவீந்திரநாத், அதற்குள் எப்படி அமைச்சர் பதவி என்று சலசலப்பு எழுந்தது. ஒரு கட்டத்தில் சீனியர் உறுப்பினர் வைத்திலிங்கம், "இவ்வளவு நாளா எம்பியாக இருக்கும் எனக்கு மத்திய அமைச்சர் பதவி இல்லையா?" என்று சீறினார். இதையடுத்து முதல்வரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து நெருக்கடி தந்தார்.

தேனி தொகுதி
எல்லாவற்றுக்கும் மேலாக, ஓபிஎஸ் மீது எல்லாருக்குமே ஒட்டுமொத்த கோபம் உள்ளது. தேனி தொகுதிக்கு முதல்வரை அழைத்தது முதல், வாரணாசி சென்றதுவரை அவரது செயல்பாடுகள் யாருக்குமே பிடிபடாமல் இருந்தது. மகனுக்கு எப்படியும் சீட் கேட்பவர், கண்டிப்பாக ராஜ்ய சபா சீட் பற்றி ஓபிஎஸ் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு விஷயத்தையே ஓபிஎஸ் பாஜக மேலிடத்தில் சொல்லவில்லை போல தெரிகிறது. இதனால்தான் அவர் மீது ஏக கடுப்பில் உள்ளனர் அதிமுகவின் முக்கிய புள்ளிகள்.

தம்பிதுரை
இப்போது மகனுக்கு சீட்டும் உறுதியாகிவிட்டதால், இன்னும் அப்செட்டில் உள்ளனர். இபிஎஸ்-ஐ விட ஓபிஎஸ்-ன் பேச்சு டெல்லி வட்டாரத்தில் எடுபட்டுள்ளதாகவே தெரிகிறது. அதனால், தம்பிதுரை, மைத்ரேயன் இவர்களில் யாரையாவது ஒருத்தரை எப்படியாவது ராஜ்ய சபாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு கண்டிப்பாக முதல்வர் வருவார் என்றே தெரிகிறது.

முயற்சி
ஏனெனில் ஓபிஎஸ்-ன் செல்வாக்கு இனி தேசிய அளவில் விரிவடையவே செய்யும். மேலும் டெல்லியில் அதிமுகவுக்கு எதிராக என்ன நடக்கிறது என்று கூட தெரிந்து கொள்ள முடியாத நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டுவிடும் என்பதாலேயே நம்பிக்கையான ஒருவரை அனுப்ப முதல்வர் முயற்சி செய்யக்கூடும்.

அதிமுக என்னாகும்?
அதே சமயம், இப்படி மகனை அமைச்சராக்கத்தான், சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து காய் நகர்த்தி ஓபிஎஸ் காலி செய்தாரா என்று அதிமுகவில் குரல் எழ ஆரம்பித்துள்ளது. அதனால் ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சரானது, அதிமுகவில் பெரிய புயலை கிளப்ப போகிறதா என்று தெரியவில்லை. அதே சமயத்தில் எடப்பாடி அதிமுக ஆட்சியை காப்பாற்ற யாருடனாவது இணக்கமாக செல்ல தயாராகிறாரா என்றும் புரியவில்லை. ஆனால் அதிமுக, அதிமுகவாக மட்டும் இருக்காது என்றே தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications