ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
ஜேஇஇ முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர் அதனை ஏற்றுஜேஇஇ மெயின் தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
சென்னை: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன், ஜூலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் எனவும், 2ஆம் கட்டஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

இதில் முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23-ம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இந்தாண்டுக்கான முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 முதல் மே 4ஆம் தேதி வரையும், 2ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29ஆம் தேதி வரையும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை முன்னர் அறிவித்திருந்தது.
இதனிடையே முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ. முதன்மை தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வு ஜூன், ஜூலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் எனவும், 2ஆம் கட்டஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications