வானத்தில் அருகருகே வந்து கை குலுக்கிய வியாழன், சனி - உற்சாகமாக கண்டு ரசித்த மக்கள்
வியாழன், சனி கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்ததை நேற்றிரவு பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
சென்னை: சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி கோள்கள் நேற்று மாலை ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டன, இரண்டு கோள்களும் அருகருகே இருந்த அரிய காட்சியை தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் கண்டு ரசித்தனர். 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த நிகழ்வு நடைபெற்றது. இரு கிரகங்களின் சந்திப்பு 6 நிமிடங்கள் 6 விநாடிகள் நீடித்தது.
சூரியன் மறைந்த பிறகு இரு பெரிய கோள்களும் மிகப்பெரிய நட்சத்திரங்கள் போல் காட்சி அளித்தன. இதே போன்று அடுத்த நிகழ்வு 2418ஆம் ஆண்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மேக மூட்டம் காரணமாக பொதுமக்களால் பார்த்து ரசிக்க முடியாமல் போனது.

சென்னை, சேலம், மதுரை உள்பட பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வைக் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் 2 கோள்களையும் பார்த்து ரசித்தனர்.
சென்னையில் பிர்லா கோளரங்கம், டெல்லியில் நேரு கோளரங்கம், ஜந்தர் மந்தரில் உள்ள வானியல் கோளரங்கம், பெங்களூருவில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் ஆகியவற்றில் இந்த அரிய நிகழ்வை சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழனும் சனியும் சந்தித்து கொண்டதால் பூமிக்கு எதுவும் பாதிப்பு வருமோ என்று பயப்பட தேவையில்லை என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சனி, வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும் இதற்கு முன்பு கடந்த 2000ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி அவை அருகருகே வந்தன. ஆனால் அப்போது பகல் பொழுதில் சூரியன் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை.

அடுத்து இந்த 2 கோள்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வு, 2040ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியும், அதற்கு பிறகு 2060ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியும் சந்தித்துக்கொள்ளும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 2080ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதிதான் வியாழன், சனி கோள்கள் ஒன்றாக தோன்றும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications