சிகாகோ வீதி முதல் சோவியத் ரஷ்யா வரை... கமலின் தொழிலாளர் தின வாழ்த்து... பின்னணி என்ன
சென்னை: ‛‛சிகாகோ வீதிகளில் புறப்பட்டு சோவியத் ரஷ்யாவில் ஆக்க நெருப்பானது'' எனக்கூறி வித்தியாசமான முறையில் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொழிலாளர் தின வாழ்த்தை கூறியுள்ளார். இவரது இந்த வாழ்த்துக்கு பின்னணியில் பல உண்மைகள் மறைந்துள்ளன.
ஆண்டுதோறும் மே மாதம் முதல் நாள் தொழிலாளர் தினமாக கடைப்பிடித்து வருகிறோம். இதற்கு பின்னணியில் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்களும், தியாகங்களும் உள்ளன.
அதாவது ஒரு காலக்கட்டத்தில் உலகின் பல நாடுகளில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மணிநேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். இதனால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

8 மணிநேர பணி முறை
இதற்கு எதிராக பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் செய்து தங்களுக்கான உரிமையை மீட்டெடுத்தனர். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் முதல் முறையாக 8 மணிநேர வேலை என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வெற்றியும் கண்டது. 18 ம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கிய இந்த போராட்டம் 19ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தொடர்ந்தது. இந்த போராட்டங்களின் பலனாக தான் தற்போது தொழிலாளர்களுக்கான 8 மணிநேர பணி முறை நடைமுறையில் உள்ளது.

கமல்ஹாசன் வாழ்த்து
இந்நிலையில் மே மாதம் முதல் நாளான இன்று தொழிலாளர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தொழிலாளர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

சிகாகோ முதல் சோவியத் ரஷ்யா வரை
அதில், ‛‛சிகாகோ வீதிகளில் பொறியாய்ப் புறப்பட்டு, ஐரோப்பாவில் படர்ந்து, சோவியத் ரஷ்யாவில் ஆக்க நெருப்பாகக் கொழுந்துவிட்ட சர்வதேச தொழிலாளர் நாள் இயக்கம் இன்று உலகம் முழுமையும் தொழிலாளருக்கு பாதுகாப்பாய் நிற்கிறது. தொழிலாளர் இயக்கச் செயல்பாட்டாளர்களை வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

ஏன் இப்படி கூறுகிறார் கமல்
அதாவது 1886ம் ஆண்டு சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டமும் ஹேமார்க்கெட் படுகொலை சம்பவமும் தொழிலாளர் போராட்டங்களின் மைல்கல்லாகும். அதன்பிறகு ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் போராட்டம் பரவியது. சோவியத் ரஷ்யாவில்(தற்போதைய ரஷ்யா) சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றத்தின் மூலம் மே ஒன்றாம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தான் கமல் தனது டுவிட்டர் பதிவின் மூலம் குறிப்பிட்டு தொழிலாளர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications