வாக்குபதிவு நிறைவு.. மாலை 6.30 மணி வரை.. கேரளா 70%, அசாம் 80%, மேற்கு வங்கத்தில் 77.68% வாக்கு பதிவு
சென்னை: கேரளாவில் இன்று ஒரே கட்டமாக 140 தொகுதிகளில் நடந்த வாக்குபதிவு நிறைவு பெற்றுள்ளது. அதேபோல் மேற்கு வங்கம், அசாம் சட்டசபை தேர்தலில் இன்று நடந்த மூன்றாம் கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மும்முரமாக நடந்து நிறைவு பெற்றது. 6.30 மணி வரை கேரளாவில் 70% வாக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் மேற்கு வங்கம் 77.68%; அசாமில் 80.32% வாக்குகள் பதிவாகி உள்ளது.
Recommended Video

5 மாநில சட்டசபை தேர்தல் களைகட்டி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. அதே சமயம் கேரளாவிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மேற்குவங்கத்தில் மொத்தமாக 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகம் உட்பட மொத்தம் 475 தொகுதிகளில் தற்போது தேர்தல் நடந்தது.

கேரளா
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 2.74 கோடி வாக்காளர்கள் கேரளாவில் உள்ளனர். சிபிஎம் தலைமையிலான எல்டிஎப் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணிக்கும் இடையில் கடும் மோதல் நிலவுகிறது. 1980க்கு பின் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது இல்லை என்ற சாதனையை முறியடிக்க பினராயி தலைமையிலான சிபிஎம் அரசு முயன்று வருகிறது.

கேரளாவில் 1,32,83,724 ஆண் வாக்காளர்கள், 1,41,62,025 பெண் வாக்காளர்கள், 290 திருநங்கைகள் உள்ளனர். மொத்தம் 957 வேட்பாளர்கள் கேரளாவில் நடக்கும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் மூன்றாம் கட்டமாக 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 31 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக போட்டியிடுகிறது. இடதுசாரி கூட்டணியில் காங்கிரஸ் 7 இடங்களிலும் சிபிஎம் 13 இடங்களிலும் மற்ற கூட்டணி கட்சிகள் சில இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஹவுரா நகரம், தெற்கு 24 பரகானாஸ் பகுதிகளில் உள்ள முக்கியமான தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த 31 தொகுதிகளில் 205 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இன்று மேற்கு வங்கத்தில் 78,52,425 வாக்காளர்கள் உள்ளனர்.
அசாம்:
அசாமில் உள்ள 126 தொகுதிகளில் 86 தொகுதிகளுக்கு ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று 40 தொகுதிகளில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுக்கிறது. மீதம் உள்ள தொகுதிகளில் ஏஜிஎப் உட்பட பாஜகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 24 இடங்களில் இங்கு போட்டியிடுகிறது. மீதம் உள்ள 16 இடங்களில் காங்கிரசின் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. மொத்தமாக இன்று அசாமில் 71,40,426 வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்தம் 337 வேட்பாளர்கள் இன்று அசாமில் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் மே 2ஆம் தேதி 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications