கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்..பிப்.15ல் திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..சிஎம்டிஏ உறுதி
சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் என்று சிஎம்டிஏ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்தும் மற்ற மாநிலத்தில் இருந்தும் சென்னைக்கு பயணிக்கும் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பேருந்து மூலம் பயணம் செய்பவர்கள் சென்னைக்கு வருகை தந்தால் கோயம்பேட்டில் உள்ள பேருந்து முனையத்தை மட்டுமே நாடி இருக்கவேண்டிய நிலை இருந்தது. இதனால் சென்னையின் புறநகரில் வசித்து வரும் பயணிகளுக்கு பேருந்து முனையத்திற்கு பயணம் செய்வதே சவாலாக இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சென்னையில் அடுத்த பெரிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பயணிகளுக்கு இலகுவாக இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் மற்றும் புதிய புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றை கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல பேருந்து நிலையங்கள் இருந்தால்தான் நெரிசல் குறையும்.

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 88 ஏக்கரில் ரூ.393.74 கோடி மதிப்பிட்டில் பணிகள் நடந்து வருகிறது. பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவாக கிளாம்பாக்க பேருந்து நிலைய பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னைக்கு இன்னும் 2 பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை பொங்கலுக்குள் முடிக்க முயற்சி செய்வோம் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். தீபாவளி, பொங்கல் என்று அடுத்தடுத்து திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியான நிலையில் தற்போது திறப்பு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று சிஎம்டிஏ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலும் பெருமளவில் குறையும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications