கிஷோர் கே சாமி மேலும் ஒரு வழக்கில் கைது... பெண் பத்திரிக்கையாளர்கள் அளித்த புகாரில் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூடியூபர் கிஷோர் கே சாமி ஏற்கவே சிறையிலுள்ள நிலையில், பெண் பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாக அவர் மற்றொரு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    YouTubers-க்கு அடுத்தடுத்த செக்... தொடரும் ஆக்சன்ஸ்.. பின்னணி

    அம்பேத்கர் தொடங்கி முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி என பல்வேறு தலைவர்கள் குறித்துத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தவர் யூ டியூபர் கிஷோர் கே சாமி.

    Kishore K Samy arrested in another case insulting female journalists

    கடந்த 10ஆம் தேதி காஞ்சிபுரம் திமுகவின் ஐடி பிரிவினர் அளித்த புகாரின் கீழ் கடந்த சில தினங்களுக்கு முன், போலீசார் இவரை நள்ளிரவில் கைது செய்தனர். அவர் தற்போது நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் கிஷோர் கே சாமியை மீது மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். பெண் பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட வழக்கில் போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

    எட்டு பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட 12 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஏற்கனவே சிறையில் உள்ள கிஷோர் கே சாமியை இந்த வழக்கில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+