மீள்கிறது தமிழ்நாடு.. 4 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற பாதிப்பு.. 3867 பேர் பாதிப்பு.. 72 பேர் பலி!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. தினசரி கேஸ்கள் கடந்த 2 வாரமாக வேகமாக குறைந்தது. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது.
பெரும்பாலான மாவட்டங்களில் லாக்டவுன் தளர்வுகளுக்கு பின்பும் கேஸ்கள் குறைந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கேஸ்கள் குறைந்து வருகின்றன.

எத்தனை
தமிழ்நாட்டில் இன்று 3867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 72 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 33005 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 4382 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

சென்னை
சென்னையில் இன்று 222 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2168 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 445 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2851 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 349 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 4227 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

குணம்
தமிழ்நாட்டில் இதுவரை 2427988 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 35294 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2469287 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட்
தமிழ்நாட்டில் இன்று 157791 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 156330 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 32633034 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications