ஓபிஎஸ், இபிஎஸ்ஸை நேரில் சந்திப்பேன்.. எம்ஜிஆர் பிறந்த நாளில் சசிகலா போட்ட குண்டால் அதிரும் அதிமுக!
சென்னை: அதிமுகவை ஒன்றிணைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விரைவில் நேரில் சந்திப்பேன் என சசிகலா அறிவித்திருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் சசிகலா தன்னை பொதுச்செயலாளர் என அறிவித்து கொள்கிறார்; எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக பிரகடனம் செய்து கொண்டார்; ஓபிஎஸ்ஸோ ஒருங்கிணைப்பாளரே நான் தான் என்கிறார்.
அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் பிப்ரவரி மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இவ்வழக்கில் இபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பும் பதில் மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறது.

இந்த நிலையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை வழக்கம் போல அதிமுக கோஷ்டிகள், தனித்தனியே இன்று கொண்டாடின. சென்னை தியாகராயர் நகர் இல்லத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை சசிகலா கடைபிடித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். திமுகவை வீழ்த்த அதிமுகவினரிடம் ஒற்றுமை அவசியம். ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரை விரைவில் சந்திக்க இருக்கிறேன் என்றார்.
ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரையில் சசிகலாவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்த்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். சசிகலாவும் ஓபிஎஸ்ஸும் இணைந்திருப்பதால் தேவர் ஜாதி வாக்குகளைக் கொண்ட பிரிவாக அதிமுகவின் ஓபிஎஸ்- சசிகலா கோஷ்டி உள்ளது. இபிஎஸ் தரப்பு, இருவரையும் ஏற்க மறுக்கிறது. அதனால் கவுண்டர் ஜாதி வாக்குகளை அதிகம் கொண்ட பிரிவாக இபிஎஸ் அணி உள்ளது.

அதிமுகவின் அனைத்து கோஷ்டிகளையும் ஒருங்கிணைக்க பாஜக பகீரத முயற்சி மேற்கொண்டது. ஆனாலும் அதிமுகவின் ஒவ்வொரு கோஷ்டியும் ஆளுக்கு ஒரு திசையில் உறுதியாக இருக்கின்றனர். இதனால் விரைவில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தனித்தே போட்டியிட்டாலும் ஆச்சரியமில்லை எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை சந்திக்கப் போவதாக சசிகலா அறிவித்துள்ளார். சசிகலாவின் இந்த அறிவிப்பு அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவை சந்திக்க ஓபிஎஸ் ஒப்புக் கொள்ள சாத்தியங்கள் உண்டு. ஆனால் இபிஎஸ் சந்திக்க மறுப்பார் என்றே தெரிகிறது. டெல்லி மேலிடம் நெருக்கடி கொடுத்தாலும் சசிகலாவை சந்திக்க இபிஎஸ் ஓகே சொல்வாரா? இல்லையா? என்பதுதான் அதிமுகவில் நடக்கும் ஹைலட்டான விவாதம்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications