"இத்தனை பேர்" தடுப்பூசி போட்டாலே.. கொரோனா பாதிப்பு பெரியளவில் இருக்காது.. மா. சு மகிழ்ச்சி தகவல்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரூர் நகராட்சி செல்லாண்டிபாளையத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அந்த திட்டத்தை ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசுகையில் தமிழகத்தில் நடந்த 5ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 20 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சதவீதம் மேலும் 2 சதவீதம் உயரும்.

கொரோனா பாதிப்பு
70 சதவீதத்திற்கு மேலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனாவால் பெரிய பாதிப்பு இருக்காது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 1.50 லட்சம் பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. மொத்த பரிசோதனையில் 0.80 சதவீதம். அதாவது 1 சதவீதத்திற்கும் குறைவாகும்.

கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி தெலுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் 8.53 லட்சம் பேர். இதில் 6.22 லட்சம் பேர் என 73 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் கரூர் உள்ளது.

18 வயதுக்குள்பட்டவர்கள்
18 வயதிற்கு கீழுள்ளவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையில் உள்ளது. இந்த தடுப்பூசியின் சோதனை ஓட்டம் தொடங்கினால் அதை செயல்படுத்துவதிலும் தமிழகம் முதலிடத்தில் இருக்கும் என்றார். நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் அளிக்கப்படுவதை பார்வையிட்டு பயனாளிகளுக்கு இரு மாதங்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

இரண்டாவது அலை
கொரோனா இரண்டாவது அலையை காட்டிலும் 3ஆவது அலையில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசியை போட்டுக் கொள்கிறார்கள். கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. நேற்று தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. அது போல் சென்னையில் 1600 க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் லட்சக்கணக்கான கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டன. கொரோனா சங்கிலியை உடைக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என சொல்லப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications