காசு வந்துட்டு.. கார்டு வரல.. 'கோபம்' கோயம்பேட்டில் பங்கமான ஏடிஎம்.. மர்ம நபரை தேடும் சென்னை போலீஸ்
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே உள்ள மதுரவாயலில் ஏடிஎம்மில் காசு எடுத்த நபர் கார்டு மாட்டிக்கொண்டதால் ஆத்திரத்தில் மெஷினை உடைத்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு தற்போது பெரும்பாலும் ஏடிஎம்களையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெரிய அளவில் பணம் எடுக்க வேண்டியிருந்தால் மட்டுமே வங்கிகளுக்கு நேரடியாக செல்ல முடிகிறது. மற்றபடி மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம் இயந்திரங்கள் மூலமே பெரிதும் எடுக்கிறார்கள். இதற்காக வங்கிகள் பிரதான இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களையும் நிறுவியுள்ளன.

இந்த ஏடிஎம்களில் மக்கள் தங்கள் டெபிட் கார்டுகளை கொண்டு பணம் எடுத்துக் கொள்ள முடியும். தற்போது வங்கிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக மேக்னடிக் சிப் கொண்ட ஏடிஎம் கார்டுகளையே விநியோகிக்கப்படுகின்றன. ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வரை இந்த கார்டுகளை நம்மால் கையில் எடுக்க முடியாது. பணத்தை எடுத்த பிறகே கார்டை இயந்திரம் ரிலீஸ் செய்யும்.
சில சமயங்களில் தொழில் நுட்ப கோளாறுகளால் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வராமலே அக்கவுண்டில் பணம் எடுத்ததாக மெசேஜ் வரும். அதேபோல, இந்தியரங்களில் கார்டும் சிக்கிக் கொள்ளவும் செய்கிறது. இதுகுறித்து வங்கியில் முறையிட்டால் எளிதில் இவற்றை பெற முடியும். எனினும் ஒரு சிலர் பணம் வராமல் போனாலோ, பரிவர்த்தனை முடிந்தாலோ டென்ஷன் ஆகி புலம்புவதுண்டு.
ஒருசிலர் ஏஎடிம் இயந்திரத்தோடு போராடி அவற்றை கார்டையே உடைத்துக் கொள்ளும் போக்கும் காணப்படுகிறது. அதேபோல ஒரு நிகழ்வில் தான் சென்னையில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து கார்டு வரவில்லை என்பதற்காக ஏடிஎம் எந்திரத்தை உடைத்து விட்டு சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அது குறித்த விவரம் வருமாறு:- சென்னை மதுரவாயல் திருவள்ளூர் சாலையில் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது.
இந்த ஏடிஎம் இயந்திரத்தை நேற்று இரவு காவலாளி வழக்கம் போல் ஆய்வு செய்ய சென்றார். அப்போது ஏடிஎம் கார்டு வைக்கும் இடம் சேதம் அடைந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி போலீசருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஏடிஎம்க்கு பணம் எடுக்க வந்த ஒருவர் இயந்திரத்தை உடைப்பது பதிவாகி இருந்தது.
இதனால் பணம் எதுவும் திருடப்பட்டதா என போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், திருடு போகவில்லை. ஏடிஎம் கார்டு வராமல் மாட்டிக்கொண்டதால் கோபத்தில் அடித்து உடைத்துவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications