கொரோனா தாக்குமா...? கொரோனா எப்போது அழியும்...? ஜோதிடத்தில் ஆர்வம் காட்டும் மக்கள்...!
சென்னை: கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியுமா என்பதை அறிய பலரும் ஜோதிடத்தை நாடத் தொடங்கியுள்ளனர்.
2020-ம் ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையும் என ஏற்கனவே தொலைக்காட்சிகளில் கூறிய பல ஜோதிடர்கள் இப்போது கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் இன்னும் ஜோதிடம் மீது நம்பிக்கை அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
முன்பெல்லாம் வெளிநாட்டிற்கு செல்வேனா, தொழில் அமையுமா எனக் கேட்ட பலர் இப்போது, கொரோனா எப்போது அழியும், கொரோனா பாதிப்பு எனக்கு ஏற்படுமா என்பன போன்ற கேள்விகளை தான் கேட்கிறார்கள்.

ஜோதிடம்
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அது குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனர் மக்கள். இந்த பாதிப்பில் இருந்து எப்போது மீள்வோம், கொரோனா தாக்காமல் எவ்வாறு தப்பித்துக் கொள்வது என்பதை பற்றியே நாட்டில் பெரும்பாலானோர் சிந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் ஜோதிடம் பொய் என மீண்டும் நிரூபணமாகியுள்ளது என ஒரு தரப்பினர் கூறி வந்தாலும் அதனை நம்பி இன்னும் அதன் மீது ஆர்வம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நம்பிக்கை வார்த்தைகள்
லாக்டவுன் ரணகளத்துக்கு மத்தியிலும் காணொலி மூலமும், தொலைபேசி மூலமும் விவரங்களை சொல்லி ஜோதிடம் பார்க்கும் பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறு ஜோதிடம் பார்ப்பவர்களின் முதல் கேள்வி, கொரோனா எப்போது அழியும், அது தன்னையும் தனது குடும்பத்தில் யாரையாவது தாக்குமா என்பதாக தான் உள்ளது. ஜோதிடர்கள் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்து வழக்கம் போல் சாதகமாக சாதகம் சொல்லி நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து வருகிறார்கள்.

கடும் விமர்சனங்கள்
2020-ம் ஆண்டு மகிழ்ச்சி பொங்கக் கூடிய ஆண்டாக அமையும், சிறப்பான ஆண்டாக அமையும் என கடந்த ஜனவரி மாதம் யூடியூப் சேனல்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் ஜோதிடர்கள் அளித்த பேட்டிகளையும், கிளிப்பிங்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கேலி, கிண்டல்களும் செய்யப்படுகின்றன. கடந்த மாதம் கூட குஜராத்தை சேர்ந்த பிரபல ஜோதிட நிபுணர் ஒருவர், மே 21-ம் தேதியோடு கொரோனா இந்தியாவை விட்டு ஓடிவிடும் எனக் கூறியிருந்தார்.

ஜோதிடக்கலை
ஜோதிடர்களின் கணிப்புகள் பலித்தாலும் பலிக்காவிட்டாலும் இன்னும் ஜோதிடம் மீது அதீத நம்பிக்கையும், தீராத பக்தியும் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கிளி ஜோசியம், கைரேகை, ஜாதகம் உள்ளிட்டவைகள் மீதுள்ள அளவுகடந்த நம்பிக்கையின் ஒரு சிறு பகுதியையாவது அறிவியல் மீது வைக்க வேண்டும். இதனிடையே ஜோதிடத்துக்கு பெயர் பெற்ற கேரளாவில் கொரோனா தேவி சிலை அமைத்து ஒருவர் பூஜை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications