தமிழ்நாடு அரசின் இயற்கை விவசாய கொள்கை! மண்ணை காக்கும் மகத்தான பணி! மதிமுக வரவேற்பு!
தமிழ்நாடு அரசின் இயற்கை விவசாய கொள்கைக்கு பெருகும் வரவேற்பு.
சென்னை: தமிழ்நாடு அரசின் இயற்கை விவசாய கொள்கையை மதிமுக மனதார வரவேற்பதாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ.
இக்கொள்கையின் படி, நச்சு தன்மை வாய்ந்த ரசாயண இடுபொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம், நீரையும், மண்ணையும் பாதுகாக்க வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

ரசாயண உரங்கள்
வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, மண்வளம் பாதிக்கப்படுகிறது. இந்த ரசாயண உரங்களில் கலந்து இருக்கும் நச்சு வேதிப் பொருட்கள் நம் உடலில் நோய்கள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றன.

இயற்கை வேளாண்மை
இன்றைய சூழலில், உணவு பழக்க வழக்கங்களால் சிறுவர்களுக்கு கூட இதய நோய்கள், ஒவ்வாமை, தோல் நோய்கள், புற்று நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிறுநீரகங்கள் தொற்றுகளுக்கு ஆளாகி பாதிப்படைகின்றன. இந்த அழிவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்க இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் முறை அவசியமாகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக, பல்வேறு விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு 'தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023' உருவாக்கப்பட்டுள்ளது.

நீரையும், மண்ணையும்
இக்கொள்கையின் படி, நச்சு தன்மை வாய்ந்த ரசாயண இடுபொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம், நீரையும், மண்ணையும் பாதுகாக்க வழிவகுக்கும். மேலும், அங்கக சான்றளிப்பு முறைகளில் எளிமை, பண்ணைக்கு அருகிலேயே உற்பத்தி செய்யக் கூடிய தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடு பொருள்களை ஊக்குவித்தல், சுற்றுச் சூழலுக்கு உகந்த உணவை வழங்குதல் ஆகியவற்றிருக்கும் இக்கொள்கை வழிவகுக்கிறது.

மனதார வரவேற்கிறோம்
அனைத்து வகையான பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்க மாநில அளவில் மரபணு வங்கி உருவாக்கப்படும் என்பதையும் இக்கொள்கை உறுதிபடுத்துகிறது. தமிழ் மக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண்மையை அறிமுகப்படுத்தும் தமிழ்நாடு அரசின் இக் கொள்கையை மனதார வரவேற்கிறோம்.












Click it and Unblock the Notifications