10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது - அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது என்பது பற்றிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது மொபைல் மூலமாக ஆன்லைனில் பாடங்களை கற்று வந்தனர்.

கட்டுக்குள் வந்த கொரோனா
கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின. சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டாலும் காலாண்டு,அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

பொதுத்தேர்வுகள்
ஜனவரி மாதம் ஓமிக்ரான் பரவல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கின. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. இதனையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.

ரிசல்ட் எப்போது
பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

2022-23 கல்வியாண்டு
செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரும் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று கூறினார். பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஜூன் 27ஆம் தேதியன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

2023 மார்ச் 13ல் பொதுத் தேர்வு
பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவித்த கையோடு பொதுத் தேர்வு நடைபெறும் தேதியையும் அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதியன்று தொடங்கும் என்றும் கூறினார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications