அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சுவலி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்ற போது அங்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா பேரிடர் காலம் என்பதால் முதலில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அமைச்சர் உடல்நலம் குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.
பீகாரில் ரயில்வே பாதையை சூப்பராக மேம்படுத்திய மத்திய அரசு.. தேர்தல் நேரத்தில் செம்ம மாற்றம்! .
வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.