நீங்கள் இதைச் செய்ய முன் வந்தால்...அரசு 75% மானியம் வழங்கும்! அமைச்சர் கீதாஜீவன் சூப்பர் அறிவிப்பு!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.
சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர், அரசின் மானியம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார்.
அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்துவோர் மறுவாழ்வு பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு நாள் விடுமுறை நீங்கலாக இன்று 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கேள்வி நேரத்தின் போது, மனநலம் பாதித்த நிலையில் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்துவோருக்கு மறுவாழ்வு இல்லம் அமைப்பது தொடர்பாக சங்கரன்கோவில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் கீதாஜீவன்
அதற்கு பதிலளித்து பேசிய சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், யாசகம் கேட்போர் மறுவாழ்வு இல்லங்களை தொடங்கவோ அல்லது நிர்வகிக்கவோ தொண்டு நிறுவன அமைப்புகள் முன்வந்தால் அரசு சார்பில் 75% மானியம் வழங்கப்படும் என்ற புதிய தகவலை வெளியிட்டார். மேலும், முதியோர், ஆதரவற்றோர், உள்ளிட்டோரையும் இணைத்து ஒருங்கிணைந்த மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க முன் வரும் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

துணை நிற்கும்
மறுவாழ்வு இல்லம் அமைக்கும் விவகாரத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு துணை நிற்கும் என அமைச்சர் கீதாஜீவன் அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதன் மூலம் வீதிகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் யாசகம் கேட்போர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது.

எங்கெங்கு அதிகம்
யாசகம் கேட்போர் மற்றும் மன நலம் பாதித்த நிலையில் வீதிகளில் ஆதரவற்ற நிலையில் தங்குவோர் எண்ணிக்கை சுற்றுலா தலங்களிலும், ஆன்மிகத் தலங்களிலும் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து பல தொண்டு நிறுவன அமைப்புகள் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க முன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications