அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்! இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை! மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து கிட் டெண்டர் விவகாரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

Recommended Video

    அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்! இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை! - மா.சுப்பிரமணியன்

    திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை வெளியிட்டார். ஆனால் திமுக அதனை திட்டவட்டமாக மறுத்த நிலையில், அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்புக்கான ஒப்பந்தம் பாலாஜி சர்ஜிக்கல் நிறுவனத்துக்கு தமிழக அரசு தந்துள்ளது. குறிப்பாக ஊழல் நடந்திருப்பதாக அண்ணாமலை புகார் கூறிய நிறுவனத்துக்கு டெண்டர் தரப்படவில்லை.

    அண்ணாமலை பாஜக

    அண்ணாமலை பாஜக

    இதற்கிடையே கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து கிட் டெண்டர் விவகாரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்," கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காழ்ப்புணர்ச்சியுடன் அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திருக்கப்படும். குறைகள் இருந்தால் களையப்படும். அதைவிடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம். தற்போது கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தம், அண்ணாமலை கூறியதுபோல, அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை.

    ஊட்டச்சத்து கிட் டெண்டர்

    ஊட்டச்சத்து கிட் டெண்டர்

    பாலாஜி சர்ஜிக்கல் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்திற்குதான் தரப்போகிறார்கள் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தியது எந்த அளவுக்கு நியாயம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆதாரத்துடன் கூறினால், தவறு நடந்து இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்து இருந்தேன்.

    சட்டபூர்வமான நடவடிக்கை

    சட்டபூர்வமான நடவடிக்கை

    அண்ணாமலை சொன்ன நிறுவனம் 2வது இடத்திற்கு போய்விட்டது. எனவே, முதல் இடத்தில் உள்ள நிறுவனத்திற்குதான் இந்த பணி ஆணை வழங்கப்படும். இதை டெண்டர் கமிட்டி இறுதி செய்யும். எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்ததற்கு அண்ணாமலை நாகரிகமான முறையில் வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் அல்லது துறையின் அடிப்படையில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்." என கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+