அத்திக்கடவு -அவினாசி திட்டப் பணிகள் இந்த மாதம் இறுதியில் நிறைவடையும் - அமைச்சர் முத்துசாமி
சென்னை: அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு சோதனை ஓட்டத்துக்கு கூடுதலாக 10 நாட்கள் தேவைப்படுவதால் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
அவினாசி அத்திக்கடவு திட்டத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கனவுத் திட்டமாக பார்க்கப்படுகிறது.

அவினாசி அத்திக்கடவு
அத்திக்கடவு அவிநாசி திட்டம் கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏரி, குளங்கள் அனைத்தையும் தண்ணீர் நிரப்புகின்ற திட்டம். அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை செறிவூட்டு மேம்படுத்துகின்ற திட்டம். குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு உள்ள தண்ணீர் பற்றா குறையை போக்குகின்ற திட்டம்.

தொடர் போராட்டங்கள்
முதன்முதலாக 1957 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாரப்ப கவுண்டர் இந்த திட்டத்திற்கான கோரிக்கை வைத்தார். 60 ஆண்டு காலமாக இத்திட்டம் கிடப்பில் இருந்த நிலையில், தேர்தல் கால வாக்குறுதி திட்டமாகவே மட்டும் இருந்து வந்தது. இதையடுத்து பல்வேறு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

திட்டம் தொடக்கம்
இதையடுத்து 2016- 17 ஆம் ஆண்டில் அவினாசி அத்திக்கடவு திட்டம் அறிவிக்கப்பட்டு 2017-18 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டது. பிறகு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் துவங்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வழியாக இந்த மெகா திட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அமைச்சர் முத்துசாமி, அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகளானது இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்ற உறுதியை கொடுத்திருக்கிறார்.

சோதனை ஓட்டம்
அதுமட்டுமல்லாமல் சோதனை கால ஓட்டத்துக்கு கூடுதலாக அதிகாரிகள் தரப்பில் 10 நாட்கள் கேட்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி 6 பம்பிங் ஸ்டேஷன்களும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications