10% இடஒதுக்கீடு விவகாரம்.. ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர் ஏழையா? இறங்கி அடிக்கும் பிடிஆர்!
சென்னை: இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான சில கோடி மக்கள் மட்டுமே ஊதியம் பெற்று வரும் நிலையில், ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர் ஏழையா என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று திமுக அறிவித்தது.
இதனிடையே 10% இடஒதுக்கீடு விவகாரம் குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன்படி 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

பாஜக ஆதரவு
அதேபோல் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் திமுக பிராமண எதிர்ப்பை வைத்து அரசியல் செய்வதாகவும் தமிழக பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஓபிஎஸ், 10% இடஒதுக்கீட்டு எதிராக தமிழக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1.7 கோடி மக்கள்
இதுகுறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் வரி கட்டி வருகிறார்கள். சுமார் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியாவில், 1.7 கோடி மக்கள் மட்டுமே சாதாரணமாக ரூ.5 லட்சத்திற்கு மேல் ஊதியம் வாங்குகிறார்கள். ஆனால் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு ரூ.8 லட்சத்திற்கு கீழ் ஊதியம் வாங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏழைகளா?
அப்போது ரூ.8 லட்சத்திற்கு கீழ் ஊதியம் ஈட்டுபவர்கள் எப்படி ஏழைகளாக இருப்பார்கள். இடஒதுக்கீடு என்பது சாதி ரீதியாக கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டது. சாதி, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறிய வகுப்பில் உள்ள மாணவரையும், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த மாணவரையும் எப்படி ஒரே இடத்தில் வைத்து பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

பொருளாதாரம்
தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான் சமூகநீதி. பொருளாதாரத்தில் சராசரியை விடவும் 5 மடங்கு அதிகம் சம்பாதித்தாலும், 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார சூழ்நிலை என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது. அதனால் பொருளாதார ரீதியாக வழங்கப்படும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications