பொங்கல் விடுமுறை.. மறுப்பையும் மழுப்பலையும் விடுங்கள்.. முறையான அறிவிப்பை கொடுங்கள்.. ஸ்டாலின்
சென்னை: பொங்கல் விடுமுறை குறித்து மறுப்பையும் மழுப்பலையும் விட்டுவிடுங்கள் என்றும் முறையான அறிவிப்பை கொடுங்கள் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தை போக்க வரும் ஜனவரி 16-ஆம் தேதி பிரதமரின் உரையை கேட்பதற்காக மாணவர்களுக்கு அன்றைய தினம் விடுமுறை ரத்து என்ற அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து விடுமுறை அளிக்காமல் அன்றைய தினம் பள்ளி வேலைநாளாக இருந்தால் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமரின் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை. விரும்பினால் வரலாம். இல்லாவிட்டால் வீட்டிலிருந்தபடியே கேட்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பிரதமர் உரை கேட்க மாணவர்கள் மாட்டுப் பொங்கலன்று பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என, கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, முதல்வரும், அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.
என்னது வண்டியில பெட்ரோல் கம்மியா இருக்கா.. அப்போ வெளிய போகவே வேணாம்ப்பா.. பெங்களூர்வாசிகளின் அவஸ்தை
அப்படி எனில், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரையாக கூட இன்றி, ஏன் செயல்முறை ஆணையாக நேற்று வெளியிட வேண்டும்? முதல்வரும், அமைச்சரும் தரும் பதிலைப் பார்த்தால் பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது!
எனவே, இந்த விவகாரத்தில் வெறும் மறுப்பையும், மழுப்பலையும் விட்டுவிட்டு முறையான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.