மொதல்ல போஸ்டர் ஒட்டுறத நிறுத்தணும்.. ஜெயக்குமார் நினைத்தால் அதிமுக ஒன்றுபடும்.. நயினார் நாகேந்திரன்
சென்னை: அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்த இயக்கமாக செயல்பட வேண்டும் என சேலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தனித்தனியே போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் நேற்று முன் தினம் முதல் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்ததிலிருந்து ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக ஒற்றுமை
இந்த நிலையில் அதிமுக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கேபி இராமலிங்கத்தின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக இயக்கம்
அப்போது அவர் கூறுகையில், அதிமுக இயக்கம் மாபெரும் இயக்கம். மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எளிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சில மாற்றங்கள் ஏற்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவன் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

எண்ணம்
எங்களுடைய கட்சியின் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கிறது. அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நான் மிகவும் மதிக்கக் கூடிய மனிதர். இந்த கழகம் ஒற்றுமையாக செயல்பட அவர் பேச வேண்டும்.

போஸ்டர்கள்
போஸ்டர்கள் அடிப்பதை நிறுத்திவிட்டு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றார். ஜெயலலிதா காலத்தில் நயினார் நாகேந்திரன் 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை மின்சாரத் துறை, தொழில்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட இலாகாக்களின் அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா மறைந்தவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications