அப்பா அனுபவிக்கிற சோதனைகளை பார்த்தா மனசு வலிக்குது.. “ஆனா ஒண்ணு சொல்றேன்”.. ஜெயபிரதீப் உருக்கம்!
சென்னை : அதிமுக தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக எந்த அளவுக்கு எனது அப்பா சோதனைகளை எதிர்கொள்கிறார் என்பதை பார்க்கும்பொழுது மகனாக என்னுடைய மனம் மிகவும் வேதனைப்படுகிறது என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி மோதலைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இதற்கிடையே, ஓபிஎஸ் வகிக்கும் அத்தனை பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையிலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவே தொடர்கிறார் ஓபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவோடு கூட்டு சேர்ந்துகொண்டு அதிமுகவை அழிக்க நினைப்பதாக எடப்பாடி தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் அறிக்கை விடுத்துள்ளார்.

எந்த ஒரு பொறுப்பையும்
விபி ஜெயபிரதீப் விடுத்துள்ள அறிக்கையில், "தங்கத் தாரகை புரட்சித் தலைவி ஜெயலலிதா வழிநடத்திய ராணுவக் கட்டுப்பாட்டு உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களின் விசுவாசமிக்க முதன்மைத் தொண்டராக தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் அங்கீகரித்தார்கள். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஜெயலலிதா நூற்றுக்கணக்கான பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு பொறுப்பையும் சரியாகச் செய்யவில்லை என்று திரும்பப் பெற்றதாக வரலாறு கிடையாது.

சூழ்ச்சிகளும் வஞ்சகமும்
எங்கள் தர்மத்தாய்க்கு பிறகு அவருடைய திறமையை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. சூழ்ச்சிகளும் வஞ்சகமும் பொய் பிரச்சாரங்களையும் ஈடுபடுத்தி தன்னெழுச்சியாக அவருக்கு கிடைத்த மக்கள் செல்வாக்கை குறைப்பதற்கு அனைத்து தவறான வழிகளையும் செயல்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்தக்கது.

கரும்புள்ளி
பதவிக்காகவும் பணத்திற்காகவும் உண்மைக்கு புறம்பாக மனசாட்சி இல்லாமல் கழக உண்மை தொண்டனை வசை பாடுபவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தங்கள் தவறை உணர்ந்து மனம் வேதனைப்படுவதை காலம் உணர்த்தும். யாருடைய எதிர்கால நலனுக்காக போராடுகிறாரோ அவர்களே அவரை வசை பாடுவது கழக வரலாற்றின் கரும்புள்ளி.

தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்க்காமல்
தனக்கென்று எந்தக் கூட்டத்தையும் சேர்க்காமல் கழகத்தில் இருக்கும் அனைத்து தொண்டர்களையும் எந்த வேறுபாடும் காட்டாமல் ஒரே மாதிரி வழிநடத்தியதால் பல சோதனைகளை எதிர்கொண்டு கழகத்திற்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்துச் சென்றுள்ளார்.

எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும்
தனது வாழ்க்கையில் அனைத்து பதவிகளையும் கடந்த 71 வயது உடைய ஒரு மனிதன் தன்னை வளர்த்துவிட்ட கழகம் தவறான வழியில் செல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு சோதனைகளை எதிர்கொள்கிறார் என்பதை பார்க்கும்பொழுது மகனாக என்னுடைய மனம் மிகவும் வேதனைப் பட்டாலும் கழக அடிமட்ட தொண்டனாக வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும் கழக நன்மைக்காக கடைசி வரை போராடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல தீர்ப்பு கிடைக்கும்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாவும், இறைவனும் மக்களும் நல்லதொரு தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்." என ஜெயபிரதீப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் நிலவி வரும் குழப்பமான சூழலில் ஜெயபிரதீப்பின் இந்த அறிக்கை தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications