"நாராயணா நாராயணா".. தப்பாட்டம்.. தம்பட்டம்.. குத்தாட்டம்.. கி.வீரமணியை கிண்டிலடிக்கும் பாஜக
கி வீரமணியை கேள்வி கேட்டு பாஜகவின் திருப்பதி நாராயணன் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: பட்டினப்பிரவேசம் விவகாரம் இன்னும் அடங்கியபாடில்லை.. திராவிடர் கழக தலைவர் வீரமணியை வம்பிழுத்து, பாஜகவின் திருப்பதி நாராயணன் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசுக்கு எதிராக கடுமையான விமர்சித்து மதுரை ஆதீனம் பேசியிருந்தார்..
அதை தொடர்ந்து ஆளுங்கட்சியினரால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கவிருப்பதாகவும் ஆதீனம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

பிரவேசம்
இதனிடையே, பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்கி உத்தரவிட்டது.. இந்த உத்தரவை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வெற்றியாக கொண்டாடினர்.. இதுகுறித்து ஆதீனமும் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "பட்டினப்பிரவேச தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறேன். இதை முன்னாடியே, சமய தலைவர்களுடன் சுமுகமாக பேசி தீர்த்திருக்கலாம்.. திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு வாழ்த்துக்கள். அவர் இவ்விஷயத்தை ஆரம்பிக்காமல் விட்டிருந்தால், பட்டினப்பிரவேசம் என்றால் என்ன என்பதே யாருக்கும் தெரிந்திருக்காது.. ஆனால், இன்றோ உலகத்திற்கே தெரிந்து விட்டது" என்று கூறியிருந்தார்.

திடீர் அனுமதி
திமுக அரசு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி தந்தது பல்வேறு விமர்சனங்களையும், விவாதங்களையும் உள்ளடக்கி வருகிறது.. ஒரு வாரம் முழுக்க எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, கண்டனங்களையும் தெரிவித்துவிட்டு, எதற்காக திமுக அரசு திடீரென அனுமதி தர வேண்டும், பாஜகவுக்கு திமுக பயந்துவிட்டதா? பின்வாங்கிவிட்டதா? ஏன் இப்படி பணிந்துவிட்டது? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன.

ஸ்டாலின் சபாஷ்
மறுபக்கம், தமிழக அரசு என்பது அனைவருக்கும் பொதுவான அரசு.. முதல்வர் ஸ்டாலின் அனைத்து தரப்பினருக்கும், அவர்தான் முதல்வர்.. அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து செல்வதே ஒரு முதல்வரின் கடமை.. அதைதான் முதல்வர் சரியாக செய்திருக்கிறார்.. இந்த அணுகுமுறை சரியே என்று மற்றொரு தரப்பினர் வரவேற்று வருகின்றனர்.. எனினும், பாஜக தரப்பு இதை, தங்களுக்கான வெற்றியாக கருதி வருகிறது..

நாராயணன் கேள்வி
ஸ்டாலினுக்கு நன்றி சொல்லிய கையோடு, வீரமணியை விமர்சிக்கவும் ஆரம்பித்துவிட்டது.. ஏற்கனவே, மதுரை ஆதீனம், வீரமணிக்கு நன்றி என்று சொல்லி கிண்டலடித்திருந்தார்.. இப்போது தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, இன்னொரு கேள்வியை வீரமணியிடமே கேட்டு ட்வீட் பதிவிட்டள்ளார்.. அதில், "திமுக அரசு சிலரை திருப்தி செய்வதற்காக அளவுக்கு அதிகமாக ஆன்மீகம், ஆன்மீகம் என்று தம்பட்டம் அடிக்க வேண்டுமா?: கி.வீரமணி, தப்பாட்டம்' ஆடினால் 'தம்பட்டம்' அடித்து தான் தீர வேண்டும். அதற்கு 'குத்தாட்டம்' ஏனோ?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications