இதுவரை சென்னையில் தான் அதிக மழை.. அதிதீவிரமானது நிவர்,, இனி தான் ஆட்டம் ஆரம்பம்!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக மழை பெய்துள்ளது , மகாபலிபுரம் முதல் எண்ணூர் வரை தான் மிக கடுமையான மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையின் நகர்புறங்களில் வலுவாக பெய்திருப்பது வானிலை மையத்தின் புள்ளி விவரங்களில் தெரிகிறது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளம் வடிய கூட நேரம் கொடுக்காமல் தொடந்து கொட்டி வருகிறது மழை.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது, சென்னையில்தான் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8மணி நிலவரப்படி அதிகபட்சமாக வட சென்னையில் தான் 16 செமீ மழை பெய்துள்ளது.

எங்கு அதிக மழை
சென்னையின் முக்கிய பகுதியான அண்ணா பல்கலைக்கழகம், சோழிங்கநல்லூர் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் 15 செமீ மழை பெய்துள்ளது. தரமணி, டிஜிபி அலுவலகம், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் 14 செமீ மழை பெய்துள்ளது. மகாலபலிபுரம், ஆலந்தூர், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், புழல், செம்பரம்பாக்கம் பகுதியில் 12 செமீ மழை பெய்துள்ளது.

தாம்பரத்தில் அதிகம்
தாம்பரம் மற்றும் அம்பத்தூரில் 11 செமீ மழையும், பெரம்பூர் , , ரெட் ஹில்ஸ், பூந்தமல்லி, கோலப்பாக்கத்தில் 10 செமீ மழையும் பெய்துள்ளது. எண்ணூர், திருப்போரூர், சோழவரம் பகுதியில் 9 செமீ மழையும் பெய்துள்ளது.

காஞ்சிபுரம் பகுதி
மதுராந்தகம், கேளம்பாக்கத்தில் 8 செமீ மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 7 செமீ மழையும், செங்கல்பட்டு, கொரட்டூரில் 6 செமீ மழையும் பெய்துள்ளது. திருக்கழுக்குன்றம், செய்யூரில் 5 செமீ மழையும் இன்று காலை நிலவரப்படி பெய்துள்ளது.பொன்னேரி, கும்முடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், போன்ற பகுதிகளில் 4 செமீ மழை பெய்துள்ளது.

பெரிய மழை இனி பெய்யும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. 3 முதல் 1 செமீ அளவுக்குத்தான் பெய்துள்ளது. தற்போது புயல் அதிதீவிரம் அடைந்துள்ளதால் கடலோர மாவட்டங்களில் வெளுக்க தொடங்கி உள்ளது. புயல் கரையை கடக்க தொடங்க உள்ள நேரத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என தெரிகிறது. புதுவை அருகே கரையை கடப்பதால் மிகமிக கனமழை பெய்யம் வாய்ப்பு உள்ளது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications