மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை கிடையாது.. கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது தமிழகம்
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதிபட தெரிவித்தார்.
காவிரிக்கு குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய, சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அதற்கு பதிலடி வழங்கியுள்ளார். அவர் தமிழ் செய்தி சேனல் ஒன்றிடம் கூறியதாவது: மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படியும், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும், கர்நாடகா தன்னிச்சையாக காவிரிக்கு குறுக்கே அணை கட்ட முடியாது.

நதிநீர் பங்கீடு தொடர்பாகவோ அல்லது புதிதாக அணை கட்டுவதாக இருந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் மூலமாகத்தான் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை தெரிந்திருந்தும், மத்திய நீர்வளத்துறை ஆணையம், இந்த விஷயத்தில், தனக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்தும், கர்நாடக அரசின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வாங்கி விட்டு, இப்போது வந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பது ஏற்புடையது அல்ல. எனவே கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது. காவிரியை வைத்து அரசியல் செய்வது கர்நாடகாவிற்கு எப்போதுமே வாடிக்கையாகி வருகிறது. இதை நீதிமன்றத்தில், சந்தித்து மீண்டும் வெற்றிக் கொடியை நாட்டுவோம். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications